பெண் ஊழியருக்கு மயக்க மருந்து.. கள்ளக்காதலிக்கு மிரட்டல்.. இப்படிதான் நடந்தது முத்தூட் நிறுவன கொள்ளை
கோவை: கோவை முத்தூட் நிறுவனத்தில் 814 சவரன் கொள்ளையடித்த இளைஞர் தனது கள்ளக்காதலியை மிரட்டியும் மற்றொரு பெண் ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்தும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் அடகு வைத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி (26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்த போது சிம் கார்டு வாங்க வந்த சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது.

ரேணுகா தேவி
இது கள்ளக்காதலாக மாறியது. சுரேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்த பணம் நஷ்டமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு ரூ. 20 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. வட்டியும் அசலும் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேணுகாதேவி முத்தூட் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கணவரிடம் காட்டுவதாக மிரட்டல்
இதனால் அவரை சந்திக்க அங்கு செல்லும் போதெல்லாம் ஏராளமான மக்கள் நகை அடகு வைப்பதை கண்டுள்ளார். இதனால் அந்த நகையை கொள்ளையடித்தால் கடனை அடைத்து விட்டு ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிடலாம் என கருதியுள்ளார். இதை முதலில் ரேணுகாதேவியிடம் கூறிய போது அவர் மறுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை கணவரிடம் காட்டி விடுவதாக மிரட்டியதை அடுத்து ரேணுகா இவரது திட்டத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

விடுப்பு
இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றும் திவ்யாவுக்கு சுரேஷை தெரியும் என்பதால் அவர் விடுப்பு எடுக்கும் நேரத்தில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை திவ்யா விடுப்பு எடுத்தார். இதையடுத்து செல்வபுரம் கிளையிலிருந்து மற்றொரு திவ்யா பணிக்கு வந்தார்.

டீயில் மயக்க மருந்து
அப்போது இருவரும் மதிய உணவு சாப்பிடும் போது அவரது சாப்பாட்டில் ரேணுகா மயக்க மருந்து கலந்துள்ளார். அதை சாப்பிட்ட திவ்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் டீ வாங்கிக் கொடுத்தார். அதிலும் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டார். பின்னர் மாலை 3 மணிக்கு முகத்தில் துணியுடன் சுரேஷ் வந்த போது திவ்யா யார் நீங்கள், முகத்தை ஏன் மூடியுள்ளீர்கள் என கேட்டபோது திவ்யாவை சுரேஷ் ஓங்கி அறைந்துள்ளார். அதில் திவ்யா மயக்கமடைந்தார்.

ரேணுகாதேவி கைது
பின்னர் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சுரேஷ் சென்றுவிட்டார். இதையடுத்து ரேணுகா தேவியையும் சுரேஷையும் போலீஸார் கைது செய்தனர்.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications