பேரணிக்கு தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவேன் - கிருஷ்ணசாமி ஆவேசம்!
கோவை : சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் அண்மையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சந்தேகிக்கப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தொடர்ந்து விவாதங்களை எழுப்பி வந்தது.
கோவையில் சமூக நல்லிணக்க பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்கு கோவை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனை தொடர்ந்து கோவை குனியமுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி.

உள்துறை செயலரிடம் முறையிடுவேன்
அப்போது பேசிய அவர், "கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கில் வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுத்து வருகிறது. எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம்.

தொடர் போராட்டம்
தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடு செய்யும் முறையை அமலாக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக தொடர் போராட்டம் நடத்துவோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம். அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது. இது ஒரு ஏமாற்று வேலை என குற்றம்சாட்டினார்.

டேன் டீ
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்டக் கழகத்தின் TANTEA தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கைவிட வேண்டும்
தேயிலை தோட்டக் கழகம் நட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். இது தவறான காரணம். அப்படியல்ல, நிர்வாக சீர்கேடு தான் இதற்குக் காரணம். நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும். தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications