முப்படைகளும் தயாராக இருக்கிறது.. கோவை நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
Recommended Video

கோவை: இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது எனவும் தேவைபடும் போது சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய விமான படை உபயோகப்படுத்தபடும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விமான படை வீரர்கள் மத்தியில் பேசினார்.
இந்திய ராணுவம், விமான படை, கடற்படை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரியும் அணிகளுக்கு குடியரசு தலைவரால், உயரிய விருதான நிஷாந்த் எனப்படும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் அவார்டு வழங்கப்படுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக சூலூர் விமான படைத்தளத்தில் உள்ள 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் உள்ள ஏர் ஃபோர்ஸ் விமான படைத்தளம் ஆகிய இரு படை அணிகளுக்கு இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது.
இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு இரு படையணி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தலைமை விமானப் படை அதிகாரி விரேந்திர சிங் தனுவா,
ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்ஐ 17, டோர்னியர், சாரங்க், தேஜஸ், ஏ.என் 32,அவுரவ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும், பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சூலூர் 5 பேஸ் ரிப்பேர் டெப்போ மற்றும் ஏர் போர்ஸ் ஸ்டேசன் ஹக்கிம் பேட் அகியவைக்கு விருதுகளை வழங்கிய பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்கள் மத்தியில் பேசினார்.
அவர் கூறியதாவது: இந்த இரு அணிகளுக்கும் விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். விமானப் படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. கடந்த 1975ம் ஆண்டு போரில், ஹக்கிம்பெட் படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டது. ஹக்கிம்பெட் விமான படை தளத்தில் 1975 முதல், ஹெலிகாப்டரில் பெண் பைலட்டுகளுக்கும் 2016 போர் விமானங்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா அமைதியை விரும்பினாலும் தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது. தேவைபடும்போது, இந்திய விமான படை உபயோகப்படுத்தபடும். சூழ்நிலை வரும் போது அதற்கு தகுந்தபடி இந்திய விமான படை செயல்படும். விமான படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. சமீபத்தில் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும், சிறப்பாக செயல்பட்டது.
பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது. இந்திய விமான படை நவினமயமாக்கப்பட்டு வருகிறது. 5 பேஸ் ரிப்பேர் டிப்போ தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது. இவ்வாறு குடியரசு தலைவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இரு அணிகளின் 25 ஆண்டு கால சாதனைகள் குறித்த கையேட்டை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். விமான படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும், விமான சாகச நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் பார்வையிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications