"ஹீரோ" இறையன்பு கலக்கல்.. "பேசாமலேயே 2 பேருக்கும் புரிதல் வேணும்".. மகிழ்ச்சியோடு பார்த்த பொள்ளாச்சி
கோவை: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு கலந்து கொண்ட விழாவானது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில், சில முக்கிய அறிவுரைகளை தம்பதியர்களுக்கு இறையன்பு வழங்கியிருந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.. மனைவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழா நடந்தது.

தம்பதியினர்: இதில் ஏராளமான தம்பதியர் பங்கேற்றனர்.. அப்போது, தம்பதியினர் அனைவரும், நேருக்கு நேர் உட்கார்ந்து பூ மற்றும் பழங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அதாவது, மனைவிகளுக்கு கணவன்கள் மலர்களை தந்தார்கள்.. மனைவிகள், தங்கள் கணவர்களுக்கு கனிகளை தந்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மனைவிக்கு சிலர் ரோஜாப்பூ தந்து வாழ்த்து சொன்னார்கள்.
இந்த விழாவில், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு பேசும்போது, குடும்ப ஒற்றுமைகள் குறித்து வலியுறுத்தினார்.. அத்துடன், தம்பதியினருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
ஒரே வீடு: இறையன்பு பேசும்போது, "இந்தியாவில், இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்டன. அந்தவகையில், தற்சமயம் தனித்த குடும்பங்களே வந்து விட்டன. ஒரே வீட்டில், கணவன், மனைவி பேசாமலேயே பிரிந்து வாழ்கிறார்கள்.. அதேபோல, பல இடங்களில், ஒற்றை பெற்றோர் குடும்பம் பெருகி வருகின்றன.. இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மனைவிக்கு மரியாதை: குடும்பத்தில், கணவன் - மனைவி 2 பேருமே பேசாமல் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்பம்
தளிர்க்கும். பெண்கள் சுதந்திரமாக சிந்திக்க துவங்கி விட்டனர். குடும்பத்தில், மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இருவரும், புரிந்தும், விட்டுக்கொடுத்தும் வாழ வேண்டும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications