"ஹீரோ" இறையன்பு கலக்கல்.. "பேசாமலேயே 2 பேருக்கும் புரிதல் வேணும்".. மகிழ்ச்சியோடு பார்த்த பொள்ளாச்சி
கோவை: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு கலந்து கொண்ட விழாவானது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில், சில முக்கிய அறிவுரைகளை தம்பதியர்களுக்கு இறையன்பு வழங்கியிருந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.. மனைவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழா நடந்தது.

தம்பதியினர்: இதில் ஏராளமான தம்பதியர் பங்கேற்றனர்.. அப்போது, தம்பதியினர் அனைவரும், நேருக்கு நேர் உட்கார்ந்து பூ மற்றும் பழங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அதாவது, மனைவிகளுக்கு கணவன்கள் மலர்களை தந்தார்கள்.. மனைவிகள், தங்கள் கணவர்களுக்கு கனிகளை தந்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மனைவிக்கு சிலர் ரோஜாப்பூ தந்து வாழ்த்து சொன்னார்கள்.
இந்த விழாவில், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு பேசும்போது, குடும்ப ஒற்றுமைகள் குறித்து வலியுறுத்தினார்.. அத்துடன், தம்பதியினருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
ஒரே வீடு: இறையன்பு பேசும்போது, "இந்தியாவில், இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்டன. அந்தவகையில், தற்சமயம் தனித்த குடும்பங்களே வந்து விட்டன. ஒரே வீட்டில், கணவன், மனைவி பேசாமலேயே பிரிந்து வாழ்கிறார்கள்.. அதேபோல, பல இடங்களில், ஒற்றை பெற்றோர் குடும்பம் பெருகி வருகின்றன.. இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மனைவிக்கு மரியாதை: குடும்பத்தில், கணவன் - மனைவி 2 பேருமே பேசாமல் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்பம்
தளிர்க்கும். பெண்கள் சுதந்திரமாக சிந்திக்க துவங்கி விட்டனர். குடும்பத்தில், மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இருவரும், புரிந்தும், விட்டுக்கொடுத்தும் வாழ வேண்டும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications