வர்ணாசிரம தர்மத்தின் மீது கோபப்படுங்கள்.. திமுக எம்பி ஆ ராசா மீது ஏன்?.. கே பாலகிருஷ்ணன் கேள்வி
கோவை: மனுதர்மத்தின் மீது கோபப்படுங்கள், அதை எடுத்து சொன்ன ஆ ராசா மீது எதற்காக கோபப்படுகிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அதன் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கோவையை பதற்றமான இடமாக மாற்றிவிடக் கூடாது.
கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் விரும்பவில்லை. நேற்றைய தினம் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்.

முதல்வர்
ஒரு மாநில முதல்வரை மிரட்டும் தொனியில் அண்ணாமலை பேசுகிறார், தமிழக காவல் துறையை மிரட்டியுள்ளார். ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் அல்லாமல் பேட்டை ரவுடி போல் அண்ணாமலை செயல்படுகிறார். தமிழகத்தில் 356 சட்டபிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

ஓட்டு
மக்களை சந்தித்து ஓட்டுகளை வாங்கி ஜெயிக்க முடியாத இவர்கள் குறுக்கு வழியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலைக்க நினைக்கிறார்கள். காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு என்ன இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஊர்வலகத்திற்கு எப்படி நீதிமன்றம் அனுமதி அளித்தது என தெரியவில்லை.

மனிதநேய சங்கிலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து மனிதநேய சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி நடத்த இருக்கிறோம். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பாஜக, ஆர்எஸ்எஸ், அமைப்புகளுக்கு கண்களை உறுத்துகிறது. ஆன்லைன் ரம்மி சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.

கடும் நடவடிக்கை
இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்துள்ளது. பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவற்றை மூடி மறைக்க பாஜகவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இந்தியாவின் பெயரை ஹிந்தியா என மாற்ற பார்க்கிறார்கள். நீலகிரி எம்பி ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. ஆ ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன்.

ஏன் கோபம்
அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து வீடியோவை ஒளிபரப்பி வருகிறார்கள். வர்ணாசிரம தர்மத்தில் உள்ளதைதான் அவர் சொல்லியுள்ளார். இதற்காக வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோபம் வர வேண்டுமே தவிர அதை எடுத்து சொன்ன ராசா மீது கோபப்படக் கூடாது. பாஜக அரசியல் நாடகம் ஆடுகிறது என்றார் பாலகிருஷ்ணன்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications