காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ்
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் யூடியூபர் ஒருவர் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி அட்டகாசம் செய்தார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூடியிருந்த பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி, பெண்களின் அனுமதியின்றி வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கேரள யூடியூபருக்கு கோவை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் ஊடகங்களின் எண்ணிக்கையை விட யூடியூபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிலர் கண்ணியமாக நடந்தாலும் பலர் சமூக பொறுப்புணர்வு இல்லாமல் உள்ளனர். வியூஸ் அதிகரித்து வைரலாகி பிரபலமாவதற்காக பல பல வித்தைகளை கையாண்டு வருகிறார்கள். வியூஸ் வெறியில் பொது இடங்களில் அநாகரீமாக நடந்து கொள்கிறார்கள்.

யூடியூபர் அட்டகாசம்
கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் யூடியூபர் ஜித்து சாஜி. இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தன் நண்பர்கள் சிலருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்திருந்தார். பரபரப்பான நேரத்தில் காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் தமிழ் பாடல் ஒன்றுக்கு பேருந்து நிலையம் முழுவதும் ஓடி ஓடி நடனமாடினார்கள். இதில் ஒரு இளைஞர் சேலை உடுத்தி பெண் வேடமணிந்து நடனமாடினார்கள். இதைப் பார்த்து பொது மக்கள் முகம் சுளித்தனர். இதனை வீடியோவாக பதிவு செய்து அதனை ரீல்ஸ் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பொது மக்கள் புகார்
அப்போது அனுமதி இல்லாமல் பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களை வீடியோ எடுத்து முகத்தை மறைக்காமல் அப்படியே வெளியிட்டனர். இந்த செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்தது. இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அனுமதியின்றி சட்ட விரோதமாக பெண்களை வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக வெளியிட்டதாக புகார் எழுந்தது.
பொதுமக்கள் கூடும் ஒரு முக்கியமான பொது இடத்தில், கோவை காவல்துறையினர் இந்த செயலை எப்படி அனுமதிக்கிறார்கள். ஏதாவது விபரீதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது. அந்த வீடியோவை நீக்கி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை நீதியை நிலை நாட்டுவார்களா. சட்டம் எல்லாம் சாமானிய மக்களுக்கு மட்டும் தானா.
காவல்துறை சம்மன்
இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிடின், அது தவறான முன் உதாரணமாகிவிடும். இதேபோல பலரும் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வார்கள் என பொது மக்கள் கூறியிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் காவல்துறையினர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து காட்டூர் காவல்துறையினர் கூறுகையில், "காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடனமாடும் வீடியோ கேரளாவை சேர்ந்த ஜிஸ், மோன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் இதேபோல, கேரளாவில் பொது இடங்களில் நடனமாடி மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பியுள்ளோம்" என்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications