Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னா சேட்டை என்னா சேட்டை.. கோவையை கலக்கிய சின்னத்தம்பி.. வசமாக சிக்கி கொண்டான்!

காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோவையை கலக்கிய சின்னத்தம்பி..பிடிபட்டது - Coimbatore forest department working to catch Chinnathambi

    கோவை: ஓவர் சேட்டை.. அமர்க்களம்.. என டிமிக்கி கொடுத்து வந்த சின்னதம்பி இப்போது வசமாக மாட்டி கொண்டான். ஆம்! மயக்க ஊசியை போட்டு சின்னதம்பி என்ற யானையை காட்டுக்கு கொண்டு போக வேலை நடந்து வருகிறது.

    கோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன.

    அதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று எண்ணி யானைகளை பிடிக்க திட்டமிட்டனர்.

    பெயர் வைத்தனர்

    பெயர் வைத்தனர்

    ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகிவிட்டது. அதனால் வினாயாகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் வைத்து அழைத்து வந்தார்கள்.

    படு சேட்டை

    படு சேட்டை

    இதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்ததொந்தரவும் தராது. ஆனால் சின்னதம்பியோ படு சேட்டை... போக்கு மேல் போக்கு காட்டி எல்லாரையும் சுத்த விட்டு விடும். கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர்.

    கண்ணீர் விடை

    கண்ணீர் விடை

    "ஆபரேஷன் வினாயக்" என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்து கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு கண்ணீர் விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

    2 கும்கி யானைகள்

    2 கும்கி யானைகள்

    அடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க திட்டமிட்டு வந்தார்கள். இதற்காக விநாயகாவை பிடிக்க உதவிய அதே 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒருவழியாக சின்னதம்பியை பிடித்து மயக்க ஊசியும் செலுத்தப்பட்டுவிட்டது. இவ்வளவு நாள் ஆட்டம் போட்டு வந்த சின்னதம்பி ஆஃப் ஆகி கிடக்கிறது.

    கழுத்தில் காலர் ஐடி

    கழுத்தில் காலர் ஐடி

    இனி சின்னதம்பிக்கும் கழுத்தில் ரேடியோ காலர் ஐடி கட்டிவிடுவார்கள். அதாவது இப்படி காலர் ஐடி கட்டிவிட்டால், யானை எந்த பகுதிக்கு தவறி சென்றுவிட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அதனால் சின்னதம்பிக்கும் காலர் ஐடியை கட்டி முதுமலையில் கொண்டு போய் விட வேலைகள் நடந்து வருகிறது.

    தந்தம் உடைந்தன

    தந்தம் உடைந்தன

    40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சின்னதம்பியை காட்டுக்குள் விடுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சின்னதம்பியை லாரியில் ஏற்றுவதற்கான லாரி கொண்டு வரப்பட்டது. அப்போது சின்னதம்பியை லாரியில் ஏற்றும்போது அதன் இரண்டு தந்தங்களும் திடீரென உடைந்துவிட்டன. இதைக்கண்டு பொதுமக்கள் சோகம் அடைந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+