என்னா சேட்டை என்னா சேட்டை.. கோவையை கலக்கிய சின்னத்தம்பி.. வசமாக சிக்கி கொண்டான்!
காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
Recommended Video

கோவை: ஓவர் சேட்டை.. அமர்க்களம்.. என டிமிக்கி கொடுத்து வந்த சின்னதம்பி இப்போது வசமாக மாட்டி கொண்டான். ஆம்! மயக்க ஊசியை போட்டு சின்னதம்பி என்ற யானையை காட்டுக்கு கொண்டு போக வேலை நடந்து வருகிறது.
கோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன.
அதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று எண்ணி யானைகளை பிடிக்க திட்டமிட்டனர்.

பெயர் வைத்தனர்
ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகிவிட்டது. அதனால் வினாயாகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் வைத்து அழைத்து வந்தார்கள்.

படு சேட்டை
இதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்ததொந்தரவும் தராது. ஆனால் சின்னதம்பியோ படு சேட்டை... போக்கு மேல் போக்கு காட்டி எல்லாரையும் சுத்த விட்டு விடும். கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர்.

கண்ணீர் விடை
"ஆபரேஷன் வினாயக்" என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்து கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு கண்ணீர் விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

2 கும்கி யானைகள்
அடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க திட்டமிட்டு வந்தார்கள். இதற்காக விநாயகாவை பிடிக்க உதவிய அதே 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒருவழியாக சின்னதம்பியை பிடித்து மயக்க ஊசியும் செலுத்தப்பட்டுவிட்டது. இவ்வளவு நாள் ஆட்டம் போட்டு வந்த சின்னதம்பி ஆஃப் ஆகி கிடக்கிறது.

கழுத்தில் காலர் ஐடி
இனி சின்னதம்பிக்கும் கழுத்தில் ரேடியோ காலர் ஐடி கட்டிவிடுவார்கள். அதாவது இப்படி காலர் ஐடி கட்டிவிட்டால், யானை எந்த பகுதிக்கு தவறி சென்றுவிட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அதனால் சின்னதம்பிக்கும் காலர் ஐடியை கட்டி முதுமலையில் கொண்டு போய் விட வேலைகள் நடந்து வருகிறது.

தந்தம் உடைந்தன
40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சின்னதம்பியை காட்டுக்குள் விடுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சின்னதம்பியை லாரியில் ஏற்றுவதற்கான லாரி கொண்டு வரப்பட்டது. அப்போது சின்னதம்பியை லாரியில் ஏற்றும்போது அதன் இரண்டு தந்தங்களும் திடீரென உடைந்துவிட்டன. இதைக்கண்டு பொதுமக்கள் சோகம் அடைந்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications