கோவையில் நாட்டுக்கோழி குழம்பு ஸ்பெசல்.... கில்லாடி ராணிக்கு லுக்அவுட் நோட்டீஸ்
கோவை : கோவையில் 100 பவுன் நகை, 2.5 கோடி பணத்தை கொள்ளையடித்த பெண்ணுக்கு லுக்அவுட் நோட்டீஸ். கோவையில் ரியல் எஸ்டேட் பெண் பிரமுகரிடம் 2.5 கோடி ரொக்க பணம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற கில்லாடி பெண் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, போலீசார் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் கொடுத்துள்ளனர்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கிரின் பீல்டு காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (63 வயது) என்பவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசன் 19 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2-வது மகள் வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால்
வீட்டில், ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

அடிக்கடி நலம் விசாரிப்பு: ரியல் எஸ்டேட் தொழில் செய்த ராஜேஸ்வரிக்கு, கோவை சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி (26) என்ற இளம்பெண் தொழில் ரீதியாக கடந்த 3 வருசத்துக்கு முன்பு பழக்கமானார். அடிக்கடி ராஜேஸ்வரியிடம் தொலைப்பேசியில் பேசி நலம் விசாரித்திருக்கிறார். அன்பாக பேசியிருக்கிறார். இதன் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலும் ராஜேஸ்வரிக்கு வர்ஷினி உதவி செய்துள்ளார். எப்படி உதவி என்றால், நிலத்தையும் சிலருக்கு விற்பனை செய்து கொடுத்துள்ளார் வர்ஷினி. நிலம் வாங்கி விற்கும் விவகாரங்களை பேசுவது மற்றும் அவரை அக்கறையாக பார்த்துக்கொள்வது போல் பேசுவது என்று வர்ஷினி அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவ்வப்போது ராஜேஸ்வரிக்கு சாப்பாடும் கொடுத்து வந்துள்ளார் வர்ஷினி.
மகள் போல் பழக்கம் : இதனால் ராஜேஸ்வரி முழுமையாக வர்ஷினியை நம்ப தொடங்கினார். தன்னுடைய மகள்கள் அருகில் இல்லாத நிலையில், தன் மகள் போல் கவனித்துக்கொண்டதாக கருதிய ராஜேஸ்வரிக்கு வர்ஷினியை மிகவும் பிடித்துவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வர்ஷினி சென்றிருக்கிறார்
நாட்டுக்கோழி குழம்பு: வர்ஷினி இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் வைத்து கொண்டு வந்திருப்பதாக கூறி ராஜேஸ்வரியிடம் சாப்பிட கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், ராஜேஸ்வரிக்கு மயக்கம் வந்திருக்கிறது. ஆனால் ராஜேஸ்வரியோ தூக்கம் தான் வருகிறது என்று நினைத்து வீட்டின் பிரதான அறையில் இருந்த சோஃபாவிலேயே படுத்துவிட்டார்.
நள்ளிரவில் நடந்தது என்ன? : இந்நிலையில் அரை மயக்கம் தெளிந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு எழுந்து பார்த்திருக்கிறார். அப்போது அவரது படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த வர்ஷினியை பார்த்து, என் பெட்ரூமுக்குள் ஏன் சென்றாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது சமாளித்த வர்ஷினி பாத்ரூமுக்கு சென்றதாக கூறியிருக்கிறார். இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த ராஜேஸ்வரி, தனது படுக்கை அறைக்கு சென்றிருக்கிறார் அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இவர் யார்?, இங்கு என்ன நடக்கிறது என்று வர்ஷினியை பார்த்து ராஜேஸ்வரி கேட்டிருக்கிறார். அதற்கும் வர்ஷினி எதையோ சொல்லி சமாளித்து அங்கிருந்து அந்த நபருடன் காரில் ஏறி சென்றுவிட்டார்.
2.5கோடி ரூபாய் கொள்ளை: இதற்கிடையே இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் சாப்பிட்டதில் மிகவும் சோர்வாக இருந்த ராஜேஸ்வரி, மீண்டும் தூங்கிவிட்டர். காலையில் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்து இருந்த ரூ.2½ கோடி ரொக்கப்பணம், 100 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேல் இருக்கும்.

கண்டுபிடிப்பு: இதையடுத்து உடனடியாக ராஜேஸ்வரி, வர்ஷினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகே தனக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.
போலீசார் விசாரணை: பின்னர் நடந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரில் வந்து விசாரித்தார்கள் மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் வர்ஷினி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண்குமார் (37) என்பவர் உள்பட 4 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தேடிய போலீசார் அருண்குமார், பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரவீன் (32), சுரேந்தர் (25) ஆகியோரை பொன்னேரியில் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம், 31 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வர்ஷினி தலைமறைவு: இதனிடையே தலைமறைவாக உள்ள வர்ஷினி, அவருடைய கார் டிரைவர் நவீன்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்களை பிடித்தால் தான் மீதி நகை மற்றும் பணத்தை மீட்க முடியும் என்பதால் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications