மருதமலை முருகன் கோயில் செல்ல இ பாஸ் தேவையா? கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கோவை: தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று மருதமலை முருகன் கோயில். முக்கிய நாட்களில் இந்த கோயிலுக்குப் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இதற்கிடையே மருதமலை கோயிலுக்கு வருவோருக்கு இ பாஸ் தேவை என்று தகவல் பரவிய நிலையில், கோயில் நிர்வாகம் இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை அறுபடை வீடுகளாகக் கருதப்படுகிறது.

முருகன் கோயில்: அதேநேரம் இந்த அறுபடை வீடுகளைத் தாண்டியும் பல முருகன் கோயில்கள் உலகளவில் பிரசித்தி பெற்று உள்ளன. அதன்படி கோவையில் அடுத்துள்ள மருத மலைக் கோயில் முக்கியமானது. தை பூசம் உள்ளிட்ட நாட்களில் மருதமலையில் கூட்டம் நிரம்பி வழியும். இதற்கிடையே இந்த கோயிலுக்கு வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம்.
மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அதிலும் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியாகச் சொல்லத் தேவையில்லை. கூட்டம் நிரம்பி வழியும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ளதால் மருதமலை கோயிலில் பார்கிங் இடம் குறைவாகவே இருக்கிறது.
கூட்டம் அதிகம்: வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் அதிக பக்தர்கள் வருவதால் பார்கிங் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக கார்களில் வருவோர் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால், இப்போது நான்கு சக்கர வாகனங்கள் வர வேண்டாம் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பக்தர்கள் படியேறி வர வேண்டும் அல்லது கோயில் பஸ் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டம்: இதற்கிடையே மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் வருவோருக்கு இ பாஸ் முறையைக் கொண்டு வருவது குறித்து இப்போது ஆலோசனை நடக்கிறது. இதன் மூலம் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இ பாஸ் முறை கொண்டு வரப்பட்டால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 வாகனங்களும், மதியம் 1 மணி மாலை 6 மணி வரை 150 வாகனங்களும் இ பாஸ் வழங்கவும் கோயில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.. வழக்கம் போல இந்த இ பாஸ் கோயில் இணையதளத்தில் பெறும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துக் கேட்பு: இந்த புதிய முறை குறித்து மக்களிடையே கோயில் நிர்வாகம் கருத்துகளைக் கேட்கிறது. மக்கள் தங்கள் கருத்துகளை நேரில் அல்லது 0422-2422490 என்ற எண்ணில் தொடர்பு கொண்டுதெரிவிக்கலாம். அல்லது, அறநிலையத்துறை இணையதளம் அல்லது மருதமலை கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
அதேநேரம் இந்த அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேவையான கார் பார்கிங்கை உருவாக்குவதற்குப் பதிலாக, பொதுமக்கள் வரக் கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயம் இல்லை என்று பாஜக விமர்சித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்கும்படி இல்லை என்றும் இது இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications