கோவை மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம் – நாளை முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமை பெற்றது கோவை. குறு சிறு நிறுவனங்களின் முதுகெலும்பாக கோவை உள்ளது. கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மருதமலை கோயில் உள்ளது. அங்கு நாளை முதல் அதிரடி மாற்றம் நிகழ போகிறது. பக்தர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேசவும், வீடியோ போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. [Maruthamalai]
கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு கிட்டத்தட்ட அறுபடை வீடுகளுக்கு இணையான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் இதை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

மருதமலை கோயிலில் மாற்றம்
தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை செல்கிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வார விடுமுறை நாட்களில் மலைப் பகுதிக்கு கார்களில் செல்ல தடை உள்ளது. தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கோவை மாவட்டம், மருதமலை கோயில் வரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 10.03.2026 தேதி (நாளை) முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
செல்போன் பயன்படுத்த தடை
ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் திருக்கோயில் வளாகத்திற்குள், கைப்பேசி (செல்போன்) பேசவும். புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. செல்போன் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் தங்களது கைப்பேசியினை சுவிட்ச் ஆப் செய்து விட்டு உள்ளே வரவும்.
இந்த நடவடிக்கைக்கு அனைத்து பக்தர்களும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து, ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் மருதமலை செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆத்திர அவசரத்திற்கு யாரையும் தகவல் தொடர்பு கொள்ள முடியாது" என மக்கள் கூறுகிறார்கள்.
காரணம்
ஆனால் மருதமலை கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதில் சிலர் போட்டோ எடுக்கிறோம் என்று பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்கள். யூடியூபர்களின் அட்ராசிட்டியும் அதிகரித்து வருகிறது. அதனால் கோயிலின் மாண்பை காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications