'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை
கோவை: 'சந்திரயான் 2 ' சவால்களை கடந்தால் நிலவின் துருவ வட்ட பாதையில் இறங்கிய முதல்நாடு என்ற பெருமையையும், யாரும் செல்லாத இடத்திற்கு சென்ற நாடு இந்தியா என்ற பெருமையும் பெற முடியும் எனவும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகராக விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக செலுத்துவதற்கு முன்பு கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சந்திரயான் 2 இறங்க வேண்டிய இடமும், நேரமும் மிக முக்கியமானது. இறங்கும் இடத்தில் சூரிய ஒளி இருக்கும். நிலவை அடையும் நேரத்தை குறைந்த எரிபொருளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 7ம் தேதி நிலவில் இறங்கும்.
நிலவின் துருவ வட்டபாதையை சரியாக அடைய வேண்டும். இறங்குவதற்கு திட்டமிட்ட பகுதியில் சரியான திசையில் வினாடிக்கு ஓரு கிலோ மீடடர் வேகம் என்பதை குறைத்து, இறங்கும் இடத்தில் கற்கல் இல்லை என்பதை உறுதி செய்த பின் இறக்கப்படும்.
பல தடைகளைக் தாண்டி பல சோதனைகளுக்கு பிறகு சரியான முறையில் சந்திரயான் 2 ஏவப்படுகிறது. சந்திரயான் 2 இறங்க வேண்டிய சரியான இடத்தைக் கவனத்தில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வானில் ஏவும் திட்டத்தைக் மாற்றியமைத்தாலும் சரியான முறையில் இலக்கை அடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. , நிலவில் இறங்கும் வரைக்கும் கவனமாக கண்காணிக்கப்படும். கடைசி வினாடி வரை முக்கியமான தருணம்" இவ்வாறு கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications