வண்டியை நேரா கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு விடுப்பா! கைலியுடன் அதிகாலையில் தமிமுன் அன்சாரி விசிட்
கோவை: மனிதநேய ஜனநாயக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவைக்கு சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து பேசி தற்போதுள்ள கள நிலவரத்தை கேட்டறிந்துள்ளார்.
இதனிடையே தமிமுன் அன்சாரியின் காரை மறித்த காவல்துறையினர் அவரது வருகை குறித்த காரணத்தை விசாரித்த பின்னர் அனுமதித்தனர்.
கட்சியினரிடம் தகவல் சொன்னால் பெரும் கூட்டம் கூடிவிடும் என்பதால், நிர்வாகிகளுக்கு கூட தகவல் சொல்வதை தவிர்த்து சர்ப்ரைஸாக விசிட் அடித்து பொதுமக்களை சந்தித்துள்ளார்.

தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னையிலிருந்து ரயில் மூலம் இன்று அதிகாலை கோவை வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் இருந்து விடுதி அறைக்கு செல்வதற்கு முன்பாக, கோவையின் யதார்த்த கள நிலவரத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியவர் நேராக கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதி, ராமர் கோவில் பகுதி, உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்து காய்கறி வியாபாரிகள், தேநீர் கடைகள், தொழிலாளர்களை சந்தித்துப் பேசி தற்போதுள்ள சூழல் பற்றி அறிந்துகொண்டார்.

கைலி, டி ஷர்ட்
கைலி, டி ஷர்ட்டுடன் சென்ற தமிமுன் அன்சாரியை பார்த்து சிலர் அடையாளம் கண்டுக்கொண்டதோடு, அதிகாலையிலேயே வந்திருக்கிறாரே என்னவாகும் இருக்கும் என பேசிக்கொண்டனர். கார் வெடிப்பு நிகழ்வுக்கு பின்னர், கடந்த ஒரு வார கால சூழல்களை விவரித்த சிறுகடை வியபாரி ஒருவர், வாங்க டீ சாப்பிடலாம் என அழைத்துச் சென்று தமிமுன் அன்சாரிக்கு டீ வாங்கிக் கொடுத்தார். இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி எப்போதும் போல் எல்லோரும் ஒன்றாக பழகி வருவதாக அந்த வியாபாரி தெரிவித்தார்.

பதற்றம் வேண்டாம்
இதனிடையே தமிமுன் அன்சாரியிடம் பேசிய உக்கடம் பகுதி இஸ்லாமியர்கள் சிலர், வன்முறை, தீவிரவாதம். பிரிவினை பேசுபவர்களை நாங்கள் யாருமே, எப்போதும் மதிப்பதில்லை என்றும் அவர்களை சாதி, மதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் சிலர் கூறினர். தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் விரும்பத்தகாத சம்பவங்களை காரணம் காட்டி பதற்றத்தை தூண்டாமல் இருந்தாலே, அதுவே பெரிய உதவி என்றும் வியாபாரிகள் அன்சாரியிடம் தெரிவித்தனர்.

அமைதி -ஒற்றுமை
அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி சுற்றி பலரிடமும் உரையாடிய மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, அமைதியான, ஒற்றுமையான வாழ்வையே இரு சமூகங்களை சேர்ந்த சாமானிய மக்கள் விரும்புவதாக தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். பிரிவினை சக்திகளை இரு சமூகங்களை சேர்ந்த கோவை மக்கள் எதிர்ப்பது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications