"மதமென பிரிந்தது போதும்".. கோவை இந்துக்கள் திருவிழாவில் மனம் குளிரவைத்த இஸ்லாமியர்கள்
கோவை: இந்துக்கள் திருவிழாவில் முஸ்லிம்களும், முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது தண்ணீர், உணவு, இனிப்புகள் போன்றவை கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், கோவை அருகே துடியலூரில் நடைபெற்ற கோவில் திருவிழா ஊர்வலத்தில், அப்பகுதி இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர், இனிப்பு போன்றவற்றை வழங்கி அன்பை வெளிப்படுத்தியது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பண்டிகைகளின்போது ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறுவது, தண்ணீர், உணவு வழங்குவது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான அரவான் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரவான் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு அரவான் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் திருவிழாவில், துடியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள பழமையான பள்ளிவாசல் முன்பு ஊர்வலம் சென்றது. பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது மாலை தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். வெவ்வேறு மதங்களாக இருப்பினும் ஒருவரின் வழிபாட்டை மற்றொருவர் மதித்து திருவிழாவில் அன்பை வெளிப்படுத்தி கொண்ட சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
-
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications