கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள்.. கார் வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை அழைத்து வந்து விசாரணை!
கோவை: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட மூவரையும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே பலமுறை என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கோவையில் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. என்.ஐ.ஏ விசாரணை காரணமாக கோவையில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications