கோவை, மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு.. அதிகாலையில் அதிர்ந்த 8 மாவட்டங்கள்.. காரணம் என்ன?
கோவை: உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். உக்கடம் பகுதியில் உள்ள ஏசி மெக்கானிக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையைத் தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக 23ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சென்னை, கோவையில் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள அபிபுல் ரகுமான் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கடிச்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார்.
இதே போல திருச்சி, மதுரையிலும் அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நிதி வசூல், மூளை சலவை செய்தல், உபகரணங்கள கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைபவர்கள் என சந்தேகம் ஏற்படும் நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோவை, நெல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் இன்றைய தினம் என்ஐஏ சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications