மாறிய முகம்.. கோவையில் திடீரென கால் வலியால் துடிதுடித்த நிர்மலா சீதாராமன்! பதறிய தொண்டர்கள்
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோடு ரோடு ஷோ சென்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது திடீரென்று கால் வலியால் துடிதுடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு ஆதரவாக இன்று நிர்மலா சீதாராமன் கோவையில் வாக்கு சேகரித்தார்.

அதன்படி நிர்மலா சீதாராமன் வாகனத்தில் பேரணியாக சென்று பிரசாரம் செய்தார். நிர்மலா சீதாராமன், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோர் திறந்த வாகனத்தில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்து ஓட்டு சேகரித்தனர்.
அதன்பிறகு நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் ‛‛கோவை தொகுதி பாஜக வேட்பாளராக உள்ள அண்ணாமலைக்கு இன்று மகளிர் அணி சார்பில் ஊர்வலம் நடந்தது. இதற்கு முன்பு பேசிய அண்ணாமலை, வானதி ஆகியோர், ‛மோடியின் ஒவ்வொரு நல திட்டங்களும் மக்களை போய் சேர்ந்துள்ளது' என்றனர். மேலும் அதில் பயன்பெற்றவர்கள் முன்வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக இன்று காலையில் நீலகிரி (தனி) லோக்சபா தொகுதிக்குட்பட்ட அவிநாசி தொகுதியில் பெண்களிடம் நான் கருத்து கேட்டேன். அப்போது அவர்களுக்கு கிடைத்த மத்திய அரசு திட்டங்களை என்னிடம் கூறினார்கள். நான் பேச வேண்டிய திட்டங்களை பயனாளிகள் கூறி உள்ளனர். இதன்மூலம் மக்கள் திட்டங்கள் கீழ் மட்டம் வரை பொதுமக்களிடம் சேர்ந்துள்ளது. பிரதமர்மோடி திட்டம் வகுத்து பணம் மட்டும் கொடுக்கவில்லை. அதனை கடைசி வரைக்கும் கொண்டு போய் சேர்த்துள்ளார்'' என்றார்.
இந்த வேளையில் திடீரென்று நிர்மலா சீதாராமன்.. அய்யய்யோ.. என வலியால் துடித்து காலை பிடித்தார். நிர்மலா சீதாராமனை சுற்றி கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்ற நிலையில் அவரது காலில் திடீரென்று அடிப்பட்டது. மேலும் அவர், ‛‛அது Fracture ஆன காலுப்பா'' என செய்தியாளரிடம் கூறி சிரித்தார். ஆனாலும் அவருக்கு காலில் வலி தொடர்ந்தது. மேலும் Fracture ஆன இடத்திலேயே அடிபட்டதை குறிக்கும் வகையில்‛‛Same Point'' என கூறினார். இதையடுத்த ரெஸ்ட் எடுத்த கொள்ளங்கள் என நிருபர் ஒருவர் கூறியபோது பரவாயில்லை என கூறி பேட்டியை தொடர்ந்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications