சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில் என்ன தப்பு? அது பொதுவான மொழிங்க! நாராயணன் திருப்பதி பேட்டி
கோவை: சமஸ்கிருதத்தை வளர்க்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தவறு கிடையாது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் (2013-14 முதல் 2022-23 வரை), மத்திய அரசால் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ₹2,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ₹100 கோடி மட்டுமே. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பல மடங்கு குறைவு! இந்த தகவல் பிரத்யேகமாக ஒன்இந்தியாதமிழ் இணையதளத்தில் நேற்று வெளியானது. இந்த செய்தி, மொழி ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் ஆர்எஸ் பாரதி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர், மத்திய அரசின் போக்கு தொடர்பாக ஒன்இந்தியா தமிழிடம் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அதேநேரம், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சமஸ்கிருதம் என்பது எந்த மாநிலத்துக்கும் தாய்மொழி அல்ல. அனைத்து மொழிகளுக்குமான ஒரு பொதுவான மொழி. அந்தந்த மாநிலங்கள் தங்களுடைய மொழியை வளர்ப்பதற்காக அதற்கென துறை வைத்து அதன் வளர்ச்சியை மேம்படுத்துவது வழக்கம்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் கடந்த 50 ஆண்டுகளில் என்ன செலவு செய்தார்கள் என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, மத்திய அரசின் மீது இதுபோன்ற மொழி ரீதியான பேதத்தை வைப்பது மிகவும் தவறானது.
தமிழர்கள், தமிழக அரசு செய்ய வேண்டிய கடமைகளை தொடர்ந்து வேண்டுமென்றே மத்திய அரசின் மீது பழிசுமத்துவது மிகவும் மலிவான அரசியலாகும். மத்திய அரசின் மீதுள்ள வெறுப்பின் அடிப்படையிலேயே இந்த மொழி அரசியல் செய்யப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதம் எனும் பொது மொழியை மத்திய அரசு வளர்ப்பதில் எந்தவொரு தவறும் கிடையாது. தமிழ் மொழியை இங்குள்ள ஆட்சியாளர்களைத் தவிர யாராலும் அழிக்க முடியாது. கடந்த 3 வருடங்களில் திமுக அரசு தமிழர்களின் வளர்ச்சிக்கு, மொழியின் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications