'பிளைட்' ஏறுவதற்காக.. துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பயணி.. அதிகாரிகள் அதிர்ச்சி.. பரபரப்பான கோவை!
கோவை: கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் உள்ள விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி பரிசோதனை, இ-பாஸ் போன்ற சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவரை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பயணி தனது பையில் 5 துப்பாக்கி குண்டுகள் வைத்து இருந்ததே அதிர்ச்சிக்கு காரணம். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள். அவரது பெயர் ஜோகிந்தர் குமார் என்பதும் டெல்லி செல்லும் இன்டிகா விமானத்தில் பயணிக்க இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஜோகிந்தர்குமார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்களை அவர் வைத்திருந்தார். போலீசார் அந்த ஆவணங்களை பரிசோதனை செய்து ஜோகிந்தர்குமாரை பயணம் செய்ய அனுமதித்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications