கோவை டூ பாலக்காடு.. வாளையாறு சோதனைசாவடியில்.. லாரி டிரைவர்கள் தந்த மறக்க முடியாத ட்விஸ்ட்
கோவை: பாலக்காடு மாவட்டம் புதுசேரியில் ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த சுமன். பாலக்காடு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமன் தலைமையிலான குழுவினர் வாளையாறு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்தார். அப்போது சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வந்ததற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.3.5 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்சம் வாங்கியதாக ஜி.எஸ்.டி. அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுசேரியில் ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த 55 வயதாகும் என்பவர் பாலக்காடு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமன் தலைமையிலான குழுவினர் வாளையாறு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை நடத்தினார்கள்.

அப்போது வாளையாறு சோதனைச்சாவடி வழியாக வந்த 2 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது பழைய இரும்பு பொருட்களை அதிகளவில் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து குறிப்பிட்ட தொகை அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே வாகனங்களை விடுவித்து அபராதமும் விதிக்காமல் இருக்க டிரைவர்கள் மூலம் சரக்கு வாகன உரிமையாளரிடம் அதிகாரி சுமன் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.3.5 லட்சம் என பேரம் பேசப்பட்டது. இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரக்கு வாகன உரிமையாளர் டிரைவர்களுடன் பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய பணமாக ரூ.3½ லட்சத்தை சரக்கு வாகன உரிமையாளரிடம் வழங்கி, அதனை சுமனிடம் கொடுக்கும்படி சில ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார்கள்.
இந்தநிலையில் நேற்று மதியம் சரக்கு வாகன உரிமையாளர், சுமனை புதுசேரி குருடிக்காடு பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதன்படி அவரும் அங்கு வந்து காத்து இருந்தார். இதையடுத்து சிறிதுநேரத்தில் அங்கு வந்த சரக்கு வாகன உரிமையாளர் ரூ.3½ லட்சத்தை சுமனிடம் கொடுத்தார். அதனை சுமனும் வாங்கிக்கொண்டார்.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லாரி டிரைவர்கள் வேடத்தில் வந்து அங்கு மறைந்து நின்றனர். தொடர்ந்து லஞ்சம் வாங்கிய சுமனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலக்காடு ஜவஹர் நகரில் உள்ள சுமனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications