பரிதாப நிலையில் கோவை.. ஒரே ஆண்டில் இப்படியா.. குமுறும் பொதுமக்கள்.. அடடே என்ன இப்படி ஆகிடுச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை: தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், இதில் கோவைக்குக் கிடைத்த ரேங்க் என்பது மிகப் பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் 2023ஆம் ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தாண்டு மொத்தம் 446 நகரங்களை ஆய்வு செய்து இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளனர்.

 People are not happy as Coimbatore lost so many places in cleanliness rank

இந்த லிஸ்ட் வந்தவுடன் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு நகரமும் இதில் டாப் 100 இடங்களில் வரவில்லை.

கோவை எங்கே: அதேபோல இந்தப் பட்டியலில் கோவை 182ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கோவை நகரம் கடந்த 2022ஆம் ஆண்டில் 42ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு அது 140க்கும் மேற்பட்ட இடங்கள் பின் தள்ளப்பட்டுள்ளன.

446 நகரங்களைக் கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு நகரமும் இல்லை என்பது மோசமான சாதனையாகும். மற்ற நகரங்களைக் காட்டிலும் கோவை டாப் 100இல் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது தான் அனைவருக்கும் அதிர்ச்சி. கோவை ஒரே ஆண்டில் மிக மோசமாகச் செயல்பட்டு 182ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள்: கோவை முனிசிபல் கார்ப்பரேஷனின் மோசமான திட்டமிடல்தான் இந்த ரேங்கில் ஏற்பட்ட கடுமையான சரிவுக்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "நகரம் மற்றும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் எந்தவொரு தீவிர நடவடிக்கையையும் எடுக்கவில்லை

கோவை இப்போது முழுக்க குப்பை நகரமாக மாறியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் கூட கோவை மாநகராட்சியின் மோசமான திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. குளிர்காலத்தில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து காலை நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தளவுக்கு அங்கே நிலைமை மோசமாக இருக்கிறது.

புரிதல் இல்லை: ஏதோ சில இடங்கள் சரிந்து இருந்தால் கூட அதை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால், 42ஆம் இடத்தில் இருந்து 182க்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நகரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டமிடுவது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு சரியான புரிதல் இல்லை" என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து கோவை மாநாகரட்சி கமிஷனர் எம் சிவகுரு பிரபாகரன் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில், "கழிவு பதப்படுத்துதல் மற்றும் சேகரிப்பு ஆகிய பிரிவுகளில் நாங்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளோம். இதன் காரணமாகவே நமது தரவரிசை குறைந்துள்ளது. இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய நுண் உரமிடும் மையங்கள் உள்ளிட்டவற்றைப் புதுப்பித்து இயக்க திட்டமிட்டுள்ளோம்.

திடக்கழிவு மேலாண்மை: மேலும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த பயோமைனிங் திட்டம் மற்றும் பயோ கேஸ் ஆலைகள் அமைப்பதற்கான திட்டங்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அடுத்தாண்டு தரவரிசையில் டாப் மீண்டும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து நவி மும்பை இதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த லிஸ்டில் டாப் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு நகரமும் இல்லை என்பதே துரதிருஷ்டவசமானதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+