17 பேரை பலிவாங்கிய கருங்கல் சுற்றுச் சுவர்.. பொதுமக்கள் மறியல்.. ஆட்சியர், எம்எல்ஏ முற்றுகை
Recommended Video
கோவை: கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகள் விழுந்து 17 பேர் பலியான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். இந்த விபத்தை ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ சின்னராஜை முற்றுகையிட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.
இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

பலியானோரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மழைக் காலம் என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது அதிகாரிகள் அக்கறை கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டிய பொதுமக்களும் உறவினர்களும் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இவர்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்துநடந்த இடத்தை பார்வையிட வந்த ஆட்சியர் மற்றும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டனர்.

மேலும் இந்த சுற்றுச்சுவரை எழுப்பிய உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழும் கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் மருத்துவமனையை சுற்றியும் மறியல் நடைபெறுகிறது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications