Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேற்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!

Subscribe to Oneindia Tamil

பேரூர்: கோவை மாவட்டம் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இந்த குடமுழுக்கை தமிழில் நடத்த பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

மேற்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்றால் அது பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆகும். இங்கு கும்பாபிஷேக விழா கடந்த 4 ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பிறகு அஷ்டமூர்த்தி ஹோமமும் ஸம்ஹிதா ஹோமமும் நடந்தது.

spirtuality perur

இதையடுத்து புனித மண் எடுத்தலும் நடந்தது. பிறகு 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்பட்டது. பல தலங்களில் இருந்து வரும் ஓதுவாமூர்த்திகள், பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். நாள்தோறும் காலையும் மாலையும் யாகசாலை பூஜை நடந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை 9.50 மணி முதல் 10.05 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் கலசங்களை ராஜகோபுரம், சன்னதிகளின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் கோவிலின் மேல் தளத்தில் பக்தர்கள் நின்று பார்வையிடவும் தற்காலிக இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் மேல் தளத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரும்பு படிக்கட்டுகள் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை நேற்று இரவு பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன. மேலும் இன்றைய தினம் கும்பாபிஷேகத்தையொட்டி பேரூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+