தங்கம் + கடிதம்.. பாலக்காட்டில் 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நகை பார்சலில்.. இன்ப அதிர்ச்சி
கோவை: இன்றைக்கு தங்கம் ஒரு பவுன் செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. இப்படியான சூழலில் பாலக்காட்டில் 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன நகை உரியவருக்கு பார்சலில் வந்திருக்கிறது. அதில் இருந்த கடிதத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தொலைத்த நகை என்னிடம் கிடைத்தது. ஆனால் அப்போது அனுப்ப முடியவில்லை என்று கூறியிருந்தார். தொலைந்த நகையை கண்டு, தாய், மகன் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தங்க நகை ஒரு பவுன் 80 ஆயிரத்தை தாண்டிவிட்டது. செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு நெருங்கி போய்விட்டது. தங்க நகை விரைவில் ஒரு சவரன் ஒன்றரை லட்சம் வரை போகும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட கடுமையான சரிவு போன்ற காரணங்களால், பங்கு சந்தையில் முதலீடு குறைந்து தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது . இதனால் இல்லத்தரசிகள் தங்கத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு விலை ஏறிக்கொண்டே செல்கிறது. யாராவது ஸ்பீட் பிரேக் போடுங்கள் என்று கூறும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது.

தங்க சங்கிலி தொலைந்தது
இப்படியான சூழலில் தங்க நகை அடங்கிய பார்சல் 21 வருடங்களுக்கு பிறகு திரும்பி கிடைத்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருவேகப்புறம் அருகே பைலிப்புறம் பட்டன்மாருதொடி பகுதியில் 65 வயதாகும் கதீஜா, தனது மகன் இப்ராஹிமுடன் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வலாஞ்சேரி பெரியகுன்னு பகுதியில் உள்ள டாக்டரை பார்க்க பேருந்தில் சென்றிருந்தனர். அந்த பயணத்தின் போது, கதீஜாவின் 3.5 பவுன் தங்க சங்கிலி தவறி விழுந்து தொலைந்து போய்விட்டது.
கூரியரில் பார்சல்
பின்னர் அவர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி கதீஜா தனது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்த மற்றொரு மகன் புதிய நகை வாங்கி தாயிடம் கொடுத்துள்ளார். இதனால் தொலைந்து போன நகை பற்றி போலீசில் புகார் கொடுக்கவில்லை. இந்தநிலையில் இப்ராஹிமின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்களுக்கு கூரியரில் பார்சல் வந்துள்ளது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.
பார்சலில் தங்கம்
தனது குழந்தைகள் ஆன்லைனில் ஏதாவது ஆர்டர் செய்து இருக்கலாம் என நினைத்து இப்ராஹிம் கூரியர் நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அங்கு பார்சலை பெற்று கொண்டு வீட்டுக்கு வந்து, அதை பிரித்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே ஒரு கடிதமும், தாளில் சுருட்டி வைக்கப்பட்ட நகையும் இருந்தது. இதை கண்ட இப்ராஹிம் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
3.5 பவுன் தங்கம்
அந்த கடிதத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தொலைத்த நகை என்னிடம் கிடைத்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால் அந்த நகையை பயன்படுத்த வேண்டி இருந்தது. தற்போது அதற்காக மிகவும் வருந்துகிறேன். அந்த நகைக்கு பதிலாக, அதே மாதிரியான 3.5 பவுன் தங்க சங்கிலியை அனுப்பி வைத்து உள்ளேன். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவும். என்னை மன்னிக்கவும் என்று கூறியிருந்தார்.
பாலக்காட்டில் நெகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து கதீஜா, இப்ராஹிம் நகையை பார்த்த போது, அது உண்மையான தங்கம் என்பது உறுதியானது. 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நகை மீண்டும் வேறொரு வடிவில் கிடைத்ததால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நகையை திருப்பி அனுப்பியவர் யார்? என்பதை அறிய விருப்பமில்லை என்று இப்ராஹிம் கூறினார். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நகையை , எடுத்தவரே மீண்டும் அனுப்பி வைத்த சம்பவம் பாலக்காட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications