வேஷ்டி – சட்டையில் பிரதமர் மோடி.. கோவை பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் உடை
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்று கவனம் ஈர்த்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று தமிழகம் வந்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று என்டிஏ பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டை அணிந்து கவனம் ஈர்த்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட முக்கிய நிர்வாகிகள், கோவை மாவட்ட அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications