மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுவிருந்தில் ரகளை செய்ததாக 150 கேரள மாணவர்கள் உள்பட 159 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
பொள்ளாச்சி சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு கணேஷ் அனுமதியின்றி ரிசார்ட் நடத்தி வந்ததாக தெரியவந்தது.

இந்த நிலையில் இங்கு சென்ற 150 கேரள மாணவர்கள் குடித்துள்ளனர். மேலும் கஞ்சா, போதை மருந்துகளை பயன்படுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி சுஜித் குமார் தலைமையிலான போலீஸார் ஆய்வு மேற்கொண்டு 150 மாணவர்களையும் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications