அதிர்ந்த கோவை.. பைக்கில் சென்ற பெண்களிடம் நகை பறித்த போலீஸ் ஏட்டு.. அதிரடி காட்டிய காவல்துறை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியை சேர்ந்தவரான தர்மசாஸ்தா என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயது 58). இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோதி நகர் பகுதியில் வந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர் மகேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

அதேபோல கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த அம்சவேணி என்பவரிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் குறித்தும் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு பெண்களிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீஸ் என்பது தெரியவந்தது. பொள்ளாச்சியை அடுத்து மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரி கிரி என்பவர் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். பெண்களிடம் நகை பறித்த வழக்கில் கைதான அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, போலீஸ் ஏட்டு சபரிகிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications