கோவையில் ஆவணங்கள் சரியாக இருந்தும் அபராதம் விதித்த போலீஸ்.. ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திங்கள்கிழமையான நேற்று நடந்தது.இந்த கூட்டம் மாவட் ஆட்சி தலைவர் பவன்குமார்தலைமையில் நடந்தது. அப்போது வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் தவறாக அபராதம் விதிக்கப்பட்டது. எனவே அபராதத்தை ரத்து செய்து, தவறாக அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை கூட்டத்துக்கு கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

நேற்றைய கூட்டத்தில். நேதாஜி மக்கள் இயக்க தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில், கடந்த 16-ந் தேதி மதியம் 2.30 மணியளவில் ஆட்டோ டிரைவர் அப்பாஸ் என்பவர் கோவை ரெயில்நிலையம் முன்புறம் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனத்தில் ஆவணங்கள் ஏதும் சரியாக இல்லை என்று கூறி ஆன்லைன் மூலமாக ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் தவறாக அபராதம் விதிக்கப்பட்டது. எனவே அபராதத்தை ரத்து செய்து, தவறாக அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
அதேபோல் கோவை ஆர்.எஸ்.புரம் கண்ணுசாமி ரோட்டை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (வயது 83) என்பவர் ஆம்புலன்சில் ஸ்ட்ரெக்சரில் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், நான் கோவை விளாங்குறிச்சியில் 4 ஏக்கர் நிலங்களை 2018-ம் ஆண்டு கிரையம் செய்தேன். அப்போது காந்திபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை நிலுவை பட்டியலில் சேர்த்தனர்.
நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தேன். அதில் பத்திரங்களை விடுவிக்க கோர்ட்டு உத்தரவு வழங்கியது. இதையடுத்து வில்லங்க சான்றில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது பட்டா மாறுதல் செய்ய முடியவில்லை. எனக்கு பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications