Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஐஜி தற்கொலை விவகாரம்: “ஆதாரம்”? 8 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்.. அடுத்தகட்ட ஆக்‌ஷனில் போலீசார்!

Subscribe to Oneindia Tamil

கோவை: டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக 8 பேர் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில், பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் காவல்துறையினர், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Police summons 8 people to appear for investigation in DIG Vijayakumar suicide case

டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், விஜயகுமார் வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். விஜயகுமாரின் மகள் மருத்துவம் படிக்க தயார் செய்து வந்ததாகவும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததன் காரணமாக விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சிலர் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், யூடியூப் சேனல்களில் கருத்து கூறியவர்கள், டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள் 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போது அவர்களிடம் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது, யார் அதனை உங்களுக்கு சொன்னது என்பது உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+