Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சியில் கிளம்பிய ராட்சத பலூன்.. கேரளா தோட்டத்தில் நடந்த திக் திக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: பொள்ளாச்சியில் சென்னையை போல அங்கு நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆனால் இந்தாண்டு பலூன் திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளுடன் பயணித்த ஒரு ராட்சத பலூன் கேரளாவில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பலூன் திருவிழா நடக்கும். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வெப்ப காற்று பலூன்களுடன் கலந்து கொள்வார்கள். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திருவிழாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

balloon pollachi

ஒவ்வொரு முறையும் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரளாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளாக கலந்து கொள்வார்கள். இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பத்தாம் ஆண்டு சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியது. கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆச்சிப்பட்டி பகுதியில் பலூன் திருவிழா நடைபெறுகிறது.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல உள்நாட்டு பலூன்களும் கலந்து கொண்டுள்ளன. நேற்று தொடங்கி வருகிற 16 ஆம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று முக்கிய பிரமுகர்கள் மற்றும் விளம்பர தாரர்களை பிரம்மாண்ட பலூன்களில் பறக்கவிட்டனர்.

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு பறந்த பலூன் திடீரென கட்டுபாட்டை இழந்தது. பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னிமாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக தரையிறங்கினர். வயல் வெளியில் இறங்கியதால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு பறந்த பலூன் திடீரென கட்டுபாட்டை இழந்தது. பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னிமாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக தரையிரங்கினர். வயல் வெளியில் இறங்கியதால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

அந்த பலூனில் ஒரு காவல்துறை அதிகாரி, இரண்டு பைலட்கள், இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எதுவுமாகவில்லை. உள்ளூர் வாசிகள் அவர்களை மீட்டு தண்ணீர் கொடுத்தனர். பிறகு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அந்த மக்கள் பொள்ளாச்சி அழைத்து வரப்பட்டனர். பலூன் திருவிழாவில் முதல் நாளில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த பலூன் திருவிழா ஏற்பாட்டாளர்கள், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தான் பலூன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. அதனால் தான் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+