"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை
கோவை: "கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கான பணம் யாருடையது? அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால், அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து விஜய் நீக்க வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர்கள் மீது போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பான புகார்கள் அதிர்ச்சியாக உள்ளன. இதுகுறித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி ஆகியோர் கோவையை சேர்ந்தவர்கள்.

முதலமைச்சர் விஜய் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும். மதுபோதை இல்லாத ஆட்சி என்பதை தான் முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. எனவே, ஆதவ் அர்ஜுனா தவெக அமைச்சரவையில் இருப்பது முறையா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த விவகாரத்தில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விஜய் நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் விஜய் மவுனம் சாதிக்கக்கூடாது. கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கான பணம் யாருடையது என கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால், அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசும் முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் சி.பி.ஐ விசாரணையும் வேண்டும்.
தமிழ்நாட்டில் தூய ஆட்சி நடக்க வேண்டும் என்றால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்க வேண்டும். லீமா ரோஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சொத்து எங்கிருந்து வந்தது? அவரையும் அ.தி.மு.க நீக்க வேண்டும். இது போன்று உறவினர்கள் மீது குற்றச்சாட்டு வரும் போது ஆதவ் அர்ஜுனா அவராகவே முன்வந்து பதவி விலக வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, லீமா ரோஸ் மார்ட்டினின் சகோதரர் ஜான் பிரிட்டோ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். போதைப்பொருட்கள் தொடர்பான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோ தான் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜான் பிரிட்டோ எனும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கும், எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. என்னிடம் மத்திய மாநில அரசுகளை சார்ந்த எந்த ஒரு புலனாய்வு நிறுவனமும், எந்த காலத்திலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, எந்த ஒரு விசாரணையும் செய்தது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications