மிரட்டும் கனமழை.. மலை ரயில் சேவை ரத்து.. மூடப்பட்ட நீலகிரி கோவை சுற்றுலா தலங்கள்
கோவை: தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை ரயில் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று (22.10.25) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

மலை ரயில் சேவை ரத்து
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை காரணமாக 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை, மண் சரிவு காரணமாக ஏற்கனவே கடந்த 3 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மழைபெய்து ரயில் பாதைகளில் பாறைகள் விழுந்துள்ளதால், நான்காவது நாளாக இன்றும் (22.10.205) மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி கோவை சுற்றுலா தலங்கள்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் ஃபாரஸ்ட், 8th மைல் ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி, கேர்ன் ஹில் ஆகிய சூழல் சுற்றுலா தலங்களில் இன்று (22.10.2025) ஒரு நாள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையாலும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று (22.10.2025) புதன்கிழமை முதல் கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என்று கோவை போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கோவை, நீலகிரி சுற்றுலா பயணிகள் சோகமடைந்துள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications