கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் மாற்றம்.. விறுவிறுப்பாக நடக்கும் வேலைகள்.. கமிஷனர் தகவல்
கோவை: கோவை மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். மக்கள் தொகை அடிப்படையிலும் சரி, பரப்பளவு அடிப்படையிலும் சரி, சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இங்கு மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
கோவையை பொறுத்தவரை மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இருகூர் தொடங்கி துடியலூர் வரையிலும், நீலாம்பூர் தொடங்கி மதுக்கரை வரையிலும் கோவை மாநகராட்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஆனால் மாநகராட்சி எல்லையை பொறுத்தவரை இன்னும் சில பகுதிகள் இணையவில்லை. அதேநேரம் அவை கோவையின் புறநகர் பகுதிகளாக உள்ளன. கோவையில் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலைகள் தற்போது அமைக்கப்படடு வருகின்றன. சில சாலைகள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடியில் 503 கி.மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர் தூரத்துக்கு முடிக்கப்பட்டு உள்ளது என்றும் 1,519 சாலை மேம்பாட்டு பணிகள் சுமார் 226.54 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகின்றன என்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க ரூ.200 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். அதன்படி சுமார் 3,456 சாலைப்பணிகள் 503.67 கி.மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படுகின்றன.
அதில் முதற்கட்டமாக, 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர் தூரத்துக்கு நிறைவு பெற்று உள்ளது. தற்போது கூடுதலாக 1,519 சாலை மேம்பாட்டு பணிகள்226.54 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், மாநில நிதிக்குழு சிறப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் 5,215 பணிகள் 860.69 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.415 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications