பொள்ளாச்சியில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்த சபரிமாலாவின் கார் கண்ணாடி உடைப்பு!

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சபரிமாலாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தார் சபரிமாலா. நீட் தேர்வுக்கு எதிராகத் தனது ஆசிரியர் பணியைத் துறந்தார். பெண்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சபரிமாலா, பெண் விடுதலை என்ற பெயரில் கட்சியையும் தொடங்கினார்.

Sabarimalas car attacked by some unknowns while she campaigns for DMK

சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கலும் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்படவே திமுகவுக்கு ஆதரவாக இப்போது பரப்புரை செய்து வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக - அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் சபரிமாலா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பொள்ளாச்சி மாவட்டம் கடந்த 28 ஆம் தேதி ஒக்கிலிபாளையத்தில் பிரச்சாரத்தில் சபரிமாலா ஈடுபட்டார்.

அப்போது அவர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சார செய்ததால் அவரது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்து சபரிமாலா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+