தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்
கோயம்புத்தூர்: தன்னையும், தன் மக்களையும் நம்பாதவர்தான், ஒநே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்று, விஜய்யை மறைமுகமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அட்டாக் செய்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அவர் பேசியதாவது, "கூட்டத்தில் நிற்க எதுவும் வேண்டியதில்லை. ஆ, ஊ என கத்திவிட்டு போய்விடலாம். ஆனால், தனித்து நிற்பதுதான் வீரம். எனக்கு நேர்மை இருக்கிறது. உள்ளத்தில் தூய்மை இருக்கிறது. எனவே தனித்து நிற்கிறேன். 100 விழுக்காடு என் மக்களையம், என் மண்ணையும் சார்ந்து நிற்கிறேன். நான் நம்புகிறேன். தன்னையும், தன் மக்களையும் நம்பாதவன்தான், ஒநே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவான்.
ஆனால், வசனம் மட்டும் நான் மாஸ் என்று பேசுவார்கள். பெரிய ஹீரோ எனில் தனித்து நிற்க வேண்டும். ஒரே தொகுதியில் நிற்க வேண்டும். தனித்து நிற்க வேண்டும், ஒரே தொகுதியில் நிற்க வேண்டும். அதற்கான தைரியம் வேண்டும். நம்பிக்கையோடு இருங்கள்.. நாங்கள் வெல்வோம் என்று பேசுகிற நபர்.. தன்மீதே நம்பிக்கை இல்லாமல் 2 தொகுதியில் நிற்கிறார்.
நான் இரண்டு முறை நின்று தோற்றிருக்கிறேன். இருப்பினும் 3வது முறையாக காரைக்குடியில் தனித்து நிற்கிறேன். காரைக்குடியுடன் சேர்த்து.. திருவொற்றியூரில் களம் இறங்க நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், என் கொள்கைக்கு எதிரானது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிக்கு போட்டியிடுவது ஜனநாயக விரோதம். ஒரே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம்.
நாங்கள் தோற்றோம். வரலாற்றில் இப்படி யாரும் தோற்க முடியாது என்கிற அளவில் நாங்கள் தோற்றோம். ஆனால், எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நாங்கள் தோற்றது, எங்கள் தாய், தந்தை, மாமன், மச்சான், சகோதர, சகோதரிகளிடத்தில்தான் தோற்றோம். இதற்காக பெருமைப்படுகிறோம்" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications