கோவை எஸ்பிக்கு நெருக்கடி.. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி
சென்னை: பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட, கோவை மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம், தமிழ் நாட்டையே உலுக்கியுள்ளது.
இது தொடர்பாக சில நாட்கள் முன்பாக, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி பாண்டியராஜன் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள்
நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்க கூடாது. ஊடகங்களில் கூட, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் செய்தி வெளியிட முடியாது. ஆனால் ஒரு மாவட்டத்தின் போலீஸ் கண்காணிப்பாளராக உள்ள ஒருவர், இந்த நெறிமுறைகளை மீறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் தெரிவித்தது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது.

தமிழக அரசாணை
எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும், கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை கண்டித்தனர். இதையடுத்து பேட்டியளித்த பாண்டியராஜன், தான் தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டு விட்டதாக விளக்கம் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அந்தப் பெண் படிக்கும் கல்லூரி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றன. இது மறுபடியும், மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25 லட்சம் ரூபாய் இழப்பீடு
இந்தச் செயல்கள் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நீதிமன்றம், உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட, கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

நடவடிக்கை எடுங்க
இருப்பினும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் தொடர்பான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. இது தொடர்பாக இன்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்ட எஸ்பி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. அதேநேரம் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு, முறைப்படி, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

பாண்டியராஜனுக்கு நெருக்கடி
தேர்தல் அதிகாரி வழங்கியுள்ள இந்த அனுமதி காரணமாக எஸ்பி பாண்டியராஜனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சத்யபிரதா சாஹு, மேலும் கூறுகையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி, பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications