தொண்டாமுத்தூர் தொகுதி.. அதிமுக எஸ்.பி வேலுமணி முன்னிலை.. திமுக சிவசேனாபதி பின்னடைவு
கோயம்புத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலை பெற்றது.

தமிழக சட்டசபை தேர்தலில் நிறைய ஸ்டார் வேட்பாளர்கள் இந்த முறை களமிறங்கி உள்ளனர். இதில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு அதிமுக சார்பாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி போட்டியிடுகிறார்.
திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் இந்த தொகுதியில் கடும் போட்டி என்று நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தபால் வாக்குகளில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலை வகிக்கிறார்.
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இங்கு பின்னடைவை சந்தித்துள்ளார். மொத்தமாக தமிழகத்தில் தபால் வாக்குகளில் திமுக 103 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, அதிமுக 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.












Click it and Unblock the Notifications