கோவையில் வீட்டின் உரிமையாளர்-வாடகைக்கு குடியிருப்பவர் இடையே பிரச்சனை.. இறுதியில் நடந்தது என்ன?
கோவை: வாடகைக்கு வீடு விடுவோர் கவனமாக இருக்க வேண்டும் . ஏனெனில் சில நேரங்களில் நினைத்து பார்க்க முடியாத சிக்கல் வருகிறது. கோவையில், வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீடு காலி செய்யவில்லை என்று வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டினார். கடைசியில் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் அளவிற்கு சென்றது.இறுதியில் அவர்கள் சமாதானம் ஆகி சென்றனர்.
கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் பெண் ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.இவர்களின் சொந்த வீட்டில் ஐந்து குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது வீட்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினர் வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீடு காலி செய்யாமல், தொந்தரவு செய்து வருவதாக வீட்டின் உரிமையாளராகிய பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அந்த குடும்பம் வீட்டை காலி செய்யாமல், முதல் வீட்டில் குடியிருப்பவருடன் சேர்ந்து வ தேவையில்லாத புகார்கள் அளித்து, பிரச்சனை செய்து வந்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பே வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீடு காலி செய்யாததுடன், அருகில் இருப்பவர்களிடமும் சண்டையிட்டு வந்ததாக அந்த பெண் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கோவை பேரூர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளிக்க சென்றாராம். அங்கு நடந்த விவரங்களை இருவரும் கூறிய நிலையில், இறுதியில் இருவரும் சமாதானம் ஆகி திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications