உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் கொங்கு நாட்டு விலங்கு... கின்னஸ் சாதனை படைத்த ‘கரும்பி’ ஆடு
கோவை: கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாட்டு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்.. அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீட்டர்) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீட்டர்) அகலமும் கொண்டதாக இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்பவே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. கன்னி, கறுப்பு, மருக்கை, குரும்பை, கச்சைகட்டி, மேச்சேரி, தலைச்சேரி, நெல்லூர், சென்னை சிவப்பு உள்ளிட்ட இன்னும் பல வகையான நாட்டின ஆடுகள் ஊருக்கு ஏற்றார் போல் வளர்க்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் வளர்க்கப்படும் குரும்பை ஆடுகள், நீண்ட நெடிய பாரம்பர்யத்தைக் கொண்டவையாக இருக்கின்றன செம்மறியாட்டு வகையைச் சேர்ந்த இந்த ஆடுகள். மேய்ச்சல் மூலம் மட்டுமே வளர்க்கப்படும் ஆடுகளாக இருக்கின்றன. கோவை சுற்றுவட்டார கிராமங்களில் இந்த ஆடுகளை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்காக இவற்றைக் கேரளா வரை ஓட்டிச் செல்வதும் வழக்கம். கேரளாவில் பாலக்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
குரும்பை ஆடுகள் இறைச்சிக்காகவும், கழிவுகள் உரமாக பயன்படுவதாலும், அதன் முரட்டு ரோமம் நல்ல விளைக்கு போவதாலும் அதிக அளவில் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் வளர்க்கிறார்கள். குரும்பை ஆடுகள் வளர்ப்பில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் பலர் குறைந்தபட்சம் 50 ஆடுகள் தொடங்கி ஏராளமான ஆடுகள் வரை வளர்த்து, விளைநிலங்களில் கிடைப் போட்டு தொழில் செய்கிறார்கள். இந்த ஆடுகள் பொதுவாகவே சிறியதாக இருக்கும். ஆனால் கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் வெள்ளாடு ஒன்று பலரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் மிகச்சிறியதாக உள்ளது.
ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வரும் பீட்டர் என்பவர் தனது தோட்டத்தில் 'கரும்பி' என்ற இந்த 'பெட்டை' ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். 4 வயதான இந்த ஆடு, இயல்பைவிட மிக சிறிதாக இருப்பதை பீட்டர் உணர்ந்தார். எனவே உள்ளூர் கால்நடை டாக்டர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார்
கின்னஸ் குழுவினர் நேரில் வந்து பீட்டரின் ஆட்டை அளந்து பார்த்தனர். அப்போது அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீட்டர்) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீட்டர்) அகலமும் கொண்டதாக இருந்துள்ளது. மேலும் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை கின்னல் அமைப்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடவே, 'கரும்பி' அனைவரையும் கவர்ந்து வேகமாக பரவி வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications