பொள்ளாச்சியில் பெண் போலீஸ் உயர் அதிகாரிக்கு மிரட்டல்.. கோவையில் விசிக மாவட்ட செயலாளர் கைது
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங்கியை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அசோக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.. கைது செய்யப்பட்ட விசிக செயலாளர் அசோக்குமாரை போலீசார் கோவையில் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த 40 வயதாகும் அசோக்குமார் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கிபாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம், அசோக்குமார் தொலைபேசியில் பேசினாராம்.

அப்போது அவர், கூடுதல் போலீல் கண்காணிப்ளர் சிருஷ்டி சிங்கை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கூடுத காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் முறைப்படி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் தகாத வார்த்தையால் திட்டுதல், மிரட்டல் விடுத்தது, பெண்ணை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அசோக்குமாரை பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். இதைத்தொடர்ந்து போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications