GST 2.0-க்குப் பிறகு அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் - நிர்மலா சீதாராமன்
கோவை: ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பிற்கு பிறகு செப்டம்பர் 22 நவராத்திரி முதல் அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அனைத்து மாநில நிதியமைச்சர்களின் பங்களிப்பில்லாமல் ஜிஎஸ்டி வரி குறைப்பு சாத்தியமில்லை என்று கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பாராட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா கோவை, நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கான பாராட்டு பிரதமருக்கானது. கொரோனா காலகட்டத்தில் கூட எந்த வரியையும் உயர்த்த பிரதமர் அனுமதிக்கவில்லை. வியாபாரிகள் குறித்து தனது குடும்ப உறுப்பினர்போல் பேசக் கூடியவர் பிரதமர். வருமான வரி உச்சவரம்பு குறித்து அதிகாரிகள் உட்பட பலரும் பல்வேறு கருத்துகள் கூறிய சூழலில் அனைவரது கருத்தையும் கேட்டு 12 லட்சம் ரூபாய் வருமான வரி உச்சவரம்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
1961-க்குப் பிறகு வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்று பிரதமர் கூறியதற்கு இணங்க தற்போது மாற்றப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிஎஸ்டியில் 5 மற்றும் 18 சதவீதம் பட்டியலில் உள்ள எந்த ஒன்றும், 40 சதவீதம் ஜிஎஸ்டி பட்டியலுக்குச் செல்லாது. அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் பங்களிப்பில்லாமல் ஜிஎஸ்டி குறைப்பு என்பது சாத்தியமில்லை.
இதேபோல, ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பிற்கு பிறகு செப்டம்பர் 22 நவராத்திரி முதல் அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஈ காமர்ஸ் மூலம் நடைபெறும் வர்த்தகம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி நிறுவனத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஹூண்டாய் நிறுவனத்தில் ஒரே நாளில் 11 ஆயிரம் டீலர் முன்பதிவு செய்தனர்.
ஆட்டோமொபைல் துறையில் வர்த்தகம் சிறப்பாக இருப்பதாக உள்ளது. இதேபோல, இன்சூரன்ஸ் துறையிலும் நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளது. ஏசி, டிவி போன்றவற்றின் விற்பனையும் உயர்ந்துள்ளது. மேலும் இதனை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த பாராட்டு விழாவில் வியாபாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் குறிப்பிட்ட அனைத்தையும் பிரதமரிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications