கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அற்புதமாக மாறுகிறது.. பல்வேறு வசதிகளுடன் திறக்கப்படுவது எப்போது?
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என நான்கு இடங்களில் பேருந்து நிலையம் இருக்கிறது. இதில் உக்கடம் பேருந்து நிலைத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. உக்கடம் பஸ் நிலையத்தை சீரமைக்கவும், முன்பு பழ மார்க்கெட் இயங்கி வந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கவும் ரூ.21.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது 40 சதவீதம் பணிகள் நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் ஓரளவு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உக்கடம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, கேரளா, பழனி உள்ளிட்ட நகரங்கள் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ள உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு ரூ.450 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

அப்போது இறங்குதளம் மற்றும் ஏறுதளம் அமைக்க அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப் பட்டன. அப்போது ஏறுதளம் அமைப்பதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியும் அகற்றப்பட்டு ஏறுதளம் அமைக்கப்பட்டது. இதனால் உக்கடம் பஸ் நிலையம் பாதிக்கு பாதி இல்லாமல் போனது போல் மாறியது. மேலும் மேம்பால பணிகள் காரணமாக குண்டும், குழியுமாக மாறியது.
இதனால் உக்கடம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசும் உக்கடம் பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், முன்பு பழ மார்க்கெட் இயங்கி வந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கவும் ரூ.21.5 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் டெண்டர் விடப்பபட்டு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது.. மொத்தம் 80 பஸ்களை கையாளும் வசதியுடன் உக்கடம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. பயணிகள் அமர இருக்கைகள், 3 இடங்களில் கழிப்பறை, இலவச இணையதள வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உக்கடம் பேருந்து நிலையத்தில் புதிய கடைகள், உணவகம், கழிப்பறை உள்ளிட்டவை கட்டும் பணி முடிய போகிறது. அதேபோல் மேலும் பயணிகளுக்கான நிழற்குடைகள் மற்றும் பஸ்கள் நிறுத்த வசதியாக தளம் அமைக்கும் வேலைகளும் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் டவுன் பஸ்கள் முதற்கட்டமாக இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அதாவது அடுத்த ஐந்து மாதத்தில் முழு பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிந்து, உக்கடம் பேருந்து நிலையம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications