பயணிகள் கவனத்துக்கு.. கோவை-திண்டுக்கல் இடையே இன்று முதல் 14ம் தேதி வரை சிறப்பு ரயில்! ரூட் இதுதான்!
கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை - திண்டுக்கல் இடையே வரும் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 12) கொண்டாடப்பட உள்ளது. இன்று நாளை சனிக்கிழமை என்பதால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில்வாய்ப்புள்ள நகரங்களில் வசித்து வரும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

கார், ரயில், அரசு பஸ், ஆம்னி பஸ்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பல்வேறு இடங்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 14ம் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை நேற்று தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளியையொட்டி கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண்கள்: 06077/06078) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் இயங்கும். 10 பொதுபெட்டிகள், 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் கோச்சுடன் இந்த ரயில் இயங்கும்.
அதன்படி கோவையில் இருந்து கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் (06077) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல்லை சென்றடையும். மறுமார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில் (06078) மாலை 5.30 மணிக்கு கோவைக்கு வரும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரபட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications