வால்பாறை 9-ம் வகுப்பு மாணவி கடைசி நிமிடத்தில் சொன்ன வார்த்தை.. ஆசிரியைகளிடம் தீவிர விசாரணை
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பகுதியை சேர்ந்த சக்திவேல் குமரன், வல்சல குமாரி தம்பதிக்கு முத்துசஞ்சனா என்ற 14 வயது பெண் குழந்தை இருந்தார். இவர் வால்பாறை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி கடந்த 10ம் தேதி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில் மாணவி முத்துசஞ்சனாவின் இந்த முடிவுக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் காரணமா என்ற கோணத்தில் வால்பாறை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பகுதியில் 40 வயதாகும் சக்திவேல் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வல்சல குமாரிக்கு 35 வயது ஆகிறது. இவர்களுடைய மகள் முத்துசஞ்சனாவுக்கு 14 வயது ஆகிறது. முத்துசஞ்சனா வால்பாறை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 10-ந் தேதி முத்துசஞ்சனா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது திடீரென உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவி முத்துசஞ்சனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துசஞ்சனா உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு மாணவி முத்துசஞ்சனா, தன்னுடைய வகுப்பு ஆசிரியைகள் கொடுமையால்தான் தீக்குளித்ததாக கூறியிருந்தாராம். இதனால் இந்த வழக்கில் விசாரணையின் கோணமே மாறி உள்ளது. மாணவி சாகும் முன்பாக பேசும் போது, கற்றல்குறைவு என்று கூறி தனி மேஜையில் ஆசிரியை அமர வைத்ததால் வேதனை அடைந்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தந்தை சக்திவேல் குமரன் கூறுகையில், எனது மகளின் இந்த முடிவுக்கு 3 ஆசிரியைகள்தான் காரணம். ஒரு ஆசிரியை என் மகளை அவமானமாக பேசியிருக்கிறார். விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் பள்ளி சென்றபோது, மற்றொரு ஆசிரியை நீ எதற்காக விடுமுறை எடுத்தாய்? என கேட்டு கன்னத்தில் அடித்திருக்கிறார். வேறொரு ஆசிரியை எனது மகளின் உருவம், தலைமுடி குறித்து கிண்டலாக பேசி புத்தகங்களை தூக்கி அவள் மீது எறிந்தாராம்.
ஆசிரியைகள் இப்படி அடுத்தடுத்து கொடுமை செய்ததால் உயிரை விட்டுவிட்டாள் என்று கூறினார். இதுதொடர்பாக பொள்ளாச்சி இடைநிலை கல்வி அதிகாரி மணிமாலா அந்த மாணவி படித்த அரசு பள்ளிக்கு நேரில் சென்று 3 ஆசிரியைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் வால்பாறை போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் மாணவி சொன்னது உண்மையா இல்லையா என்பது தெரியவரும்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications