Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னது உண்மை.. சீமானிடம் பணம் கொடுத்து ஏமாந்தோம்.. கொளத்தூர் மணி ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

கோவை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் போலியானது என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மற்றும் சீமான் இடையிலான உறவு குறித்து தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், மனநோய் வந்தவர்கள் அடுத்த என்ன செய்வார்கள் என்று தெரியாது. சீமான் சொன்ன உணவு செய்திகள் எல்லாம் பொய் என்பது அனைவருக்கும் தெரியும்.

seeman ntk kolathur mani

கரும்புலி என்று சீமான் சொன்னதை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்தது உண்மை தான். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொல்வது உண்மையே. ஏனென்றால் சீமான் படப்பிடிப்புக்காக அழைக்கப்பட்டவர் இல்லை. இருந்தாலும் நம் இயக்க மேடைகளில் பேசியவர் என்பதால் சீமானை நம்பி தொலைத்துவிட்டோம். ஈழ விடுதலை வரலாற்றை அறியாதவர்கள் பலரும் ஏமாற தொடங்கிவிட்டார்கள் என்பதால் சீமானுக்கு பொய் சொல்வதற்கான துணிச்சலை கொடுக்கிறது.

2009 போர் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழிந்துவிட்டது. விடுதலை போராட்டத்தில் கூட அத்தனை பேரும் கலந்து கொள்ளவில்லை. போர் நடக்கிறது என்பதால் உயிருக்கு ஆபத்து என்று சென்றவர்கள் ஏராளம். அதன்பின் போரில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூலி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணம் வைத்திருந்தவர்கள் பலரும் முன்பே வெளியேறி சென்றுவிட்டார்கள்.

பெரியார் மீதான கொச்சைப் பேச்சிற்கு தேர்தல் முடிவடைந்த பின் தான் எதிர்வினைகள் இருக்கும். தேர்தலின் போது சிக்கல் இருக்க கூடாது என்பதால் பெரியாரிய இயக்கங்களின் எதிர்வினைகள் அளவுடன் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கு பின் 3வது பெரிய கட்சி என்று சொல்லுவார். களத்திலேயே 2 கட்சிகள் தான் இருக்கிறார்கள்.

அதனால் 3 கட்சிகள் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்தால், அது ஒன்றுமில்லாத கட்சி என்றே அர்த்தம். திமுக, அதிமுக வாங்கிய கோடிக்கணக்கான வாக்குகளுக்கும், நாம் தமிழர் பெற்ற 30 லட்சம் வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. அதனால் அந்த கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று சீமான் நம்புகிறார்.

பெரியாரை கடுமையாக விமர்சித்துவிட்டு ஈரோட்டிலேயே இவ்வளவு வாக்குகளை பெற்றுவிட்டோம் என்று நிறுவுவதே நோக்கமாக உள்ளது. பரப்புரையின் தினமும் பெரியாரை விமர்சித்து கொண்டே இருக்கிறார். அதற்கு யாராவது வந்து நம்மை அடிக்க மாட்டார்களா, அதன் மூலம் அனுதாப வாக்குகள் கிடைக்காதா என்ற ஆசையில் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+