Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டுக்கறி திமிர் என சொல்லி முஸ்லிம் மாணவியிடம் ஷூ துடைக்க சொன்ன ஆசிரியர்! வெல்ஃபேர் கட்சி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை அரசு பள்ளியில் மாட்டுக்கறி சாப்பிடுவதாக கூறி மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.

கோவையை சேர்ந்தவர் முக்தார். இவரது மகள் துடியலூர் என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மாட்டுக்கறி சாப்பிடுவதாக கூறி பள்ளி ஆசிரியர்கள் அபிநயா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் துன்புறுத்தியதாக அவரது பெற்றோர் அளித்து உள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியிடம் ஆசிரியர்கள், “நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா, அப்படியென்றால் உனக்கு திமிர் அதிகமாக இருக்கும்.” என்று கூறி அவர் அணிந்திருந்த பர்தா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றொர் தெரிவித்து உள்ளனர்.

Welfare Party of India insisted strict action against the teacher who insulted the Muslim student eating beef

ஆசிரியர் ராஜ்குமார், மாணவியை வாடி போடி என்று ஒருமையில் அழைத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மிரட்டியதாக கூறப்படுகிறது. தீபாவளி விடுமுறை முடிந்து மாணவி பள்ளிக்கு சென்றபோதும் ஆசிரியர்கள் அபிநயாவும் ராஜ்குமாரும் சேர்ந்து மாணவி மாட்டுக்கறி சாப்பிடுவதை அனைவர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாக முக்தார் புகாரளித்து உள்ளார். இது தொடர்பாக தலைமை ஆசிரியரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தங்களுக்கு நியாயம் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு அளித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாட்டுக்கறியின் பெயரால் மாணவியை இழிவுபடுத்திய செயல் தமிழ்நாட்டில் பரவி வரும் இஸ்லாமாஃபோபியா வின் அடையாளமாகும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகளின் மீது மாட்டுக் கறியின் பெயரைச் சொல்லி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாகும். ஆசிரியர்களின் இஸ்லாமாபோபியா நடவடிக்கைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும் துணை போய் இருப்பது கண்டனத்திற்குரியதாகும். அபத்தமாகவும் வெற்றுத்தனமாகவும் திராவிட அரசியல் பேசித்திரியாமல் இந்துத்துவத்துக்கு எதிராக அம்பேத்கரும், பெரியாரும் கட்டுக் கதைகளை கட்டுடைத்தது போல் மாட்டுக்கறி அரசியலையும் எதிர்கொள்ள வேண்டும்.

அதிகரித்து வரும் இஸ்லாமாஃபோபியா செயல்பாடுகளை கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்காக வெல்ஃபேர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் முஸ்லிம் உரிமைகள் பாதுகாப்புச் ( MRP ) சட்டத்தை உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+