Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெட்டிடுவாங்க.. காப்பாத்துங்க".. நடுரோட்டில் அலறிய ஜோடி.. விழித்த மக்கள்.. ஆக்‌ஷனில் காக்கி சட்டை

கோவை ரோட்டில் அலறிய காதல் ஜோடிக்கு போலீசார் பாதுகாப்பு தந்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை, கடத்தி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் பெண்ணின் அப்பா, மற்றும் தாய் மாமன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிக்னலில் நின்ற காரில் இருந்து இளம் காதல் ஜோடி இறங்கி, தங்களை காப்பாற்ற சொல்லி அலறிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - அவிநாசி ரோடிலுள்ள லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதி, எப்போதுமே பிஸியாக இயங்கி கொண்டிருக்கும்..

 பிரதான சாலை

பிரதான சாலை

அப்படித்தான், நேற்று முன்தினம் இரவும் சுமார் 9 மணியளவில், வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன... மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்துள்ளது. அப்போது அந்த பிரதான சாலையில் சிக்னல் போட்டுவிட்டதால், வாகனங்கள் வரிசை கட்டி நின்றுள்ளது.. அந்த நேரம் பார்த்து வேகமாக ஒரு கார் வந்துள்ளது.. அந்த காரில் இருந்துதான் அலறல் குரல் கேட்டது.. இதனால் அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர்...

அலறல்

அலறல்

குறிப்பிட்ட காருக்குள் இருந்துதான் அலறல் வருகிறது என்பதையும் யூகித்து கொண்டாலும், அவர்களால் அந்த நேரம் எதுவுமே செய்ய முடியவில்லை.. அடுத்த சில நிமிடங்களில், காரில் இருந்து ஒரு காதல் ஜோடி வெளியே இறங்க முயற்சி செய்தது.. அதற்குள் காரை சுற்றி மற்ற வாகன ஓட்டிகள் வந்து விட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய ஜோடி, அங்கே நிற்காமல், வேகமாக நடுரோட்டிலேயே ஓட ஆரம்பித்துள்ளது.. ஒருகட்டத்துக்கு மேல் ஓட முடியாமல், சிக்னல் அருகில் ரோட்டோரமாக தடுமாறி உட்கார்ந்துவிட்டது..

 வாகன ஓட்டிகள்

வாகன ஓட்டிகள்

"எங்களை காப்பாத்துங்க.. வெட்டிருவாங்க.." என்று பயந்து கொண்டே அலறினார்கள்.. ஏதோ ஆபத்து என்பதை மட்டும் புரிந்து கொண்ட வாகன ஓட்டிகள், அவர்களை சுற்றி வளைத்து பாதுகாப்பாய் நின்று கொண்டனர்.. அப்போது அவர்களிடம் நாங்க 2 பேரும் லவ் பண்றோம்.. எங்களை வீடுகளில் பிரிக்க பார்க்கறாங்க.. எங்களை மிரட்டுறாங்க.. எப்படியாவது எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அழுதுகொண்டே கெஞ்சினர்.. இருவருமே கதறி கதறி அழுதனர்..

பொதுமக்கள்

பொதுமக்கள்

இதனால் பொதுமக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த நேரத்தில், டிராபிக் போலீஸ் ஒருவர் வந்தார்.. அவர் காலிலும் விழுந்து காப்பாற்ற சொல்லி காதல் ஜோடி கதறியது.. உடனடியாக அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுக்கவும், அவர்கள் விரைந்து வந்தனர்... காதல் ஜோடியிடம் விசாரணையும் மேற்கொண்டனர். அந்த இளைஞர் மணியகாரம்பாளைத்தை சேர்ந்தவராம்.. பெயர் விக்னேஸ்வரர், 22 வயதாகிறது..

இளம்பெண்

இளம்பெண்

இளம்பெண் 19 வயது சினேகா சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தராம்.. வீட்டை விட்டு ஓடிவந்து கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. உடனடியாக இருவரும் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பினரையும் காவல்துறையினர் பேசி சமாதானப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களை சேர்த்து வைப்பதாக சொல்லி, பெண்ணின் தந்தை ஒரு கார் எடுத்து கொண்டு வந்து, இந்த ஜோடியை தேனிக்கு கடத்தி செல்ல அவர் முயன்றுள்ளார்.. இந்த விஷயம் தெரிந்து அதனாலேயே காரில் இருந்து தப்பி ஓடிவந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது..

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

கார் மட்டும் அந்த சிக்னலில் நிற்காவிட்டால், தங்களை எப்படியாவது கடத்தி கொன்றுவிடுவார்கள் என்று காதலர்கள் அழுது கொண்டே சொன்னார்கள்.. இறுதியில் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இறதியில், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 294 பி, 323, 506 (1) ஆகிய பிரிவுகளில் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, தாய்மாமன் ரமேஷ், பெரியப்பா மகன் முனியசாமி, மற்றும் அமுல் என்பவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+