பொள்ளாச்சி அமுதா தம்பியுடன் சென்ற போது.. ஒரு நொடி சிதறல்.. வாழ்க்கையில் யாருமே எதிர்பார்க்காதது
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பில் சின்னாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த அமுதாவிற்கு 22 வயது ஆகிறது. இவர் சமத்தூர் மணல்மேடு அருகே தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அமுதா அணிந்த சுடிதாரின் துப்பட்டாவால் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறு அஜாக்கிரதையால் வாழ்க்கையில் யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு பெண்ணுக்கு நடந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பில் சின்னாம்பாளையம் அண்ணா நகரில் 22 வயதாகும் அமுதா என்பவர் கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அமுதா நேற்று அதிகாலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்கு முன்பாக அங்குள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது தம்பி காளிதாசுடன் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி சென்றுள்ளார்.

சமத்தூர் மணல்மேடு அருகே வந்தபோது திடீரென்று அமுதா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சிக்கியது. இதில் அமுதா நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அவரது தம்பி காளிதாஸ், அமுதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அமுதா இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அமுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் அமுதாவின் சாவில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு டாக்டர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மாலை வரை அமுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பில்சின்னாம்பாளையம் பகுதியில் திடீரென பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக பிரேத பரிசோதனை செய்து அமுதாவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்றார்கள். சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு கோட்டூர் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications