தமிழகத்தில் கொரோனா பலி பின்னணி என்ன? அமைச்சர் விஜய பாஸ்கர் சொல்லும் காரணம் இதுதான்
கோவை: தமிழகத்தில் கொரோனா சார்ந்த இறப்பு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அதிக பரிசோதனைகள் எடுக்கப்படுவது சென்னையை தொடர்ந்து கோவையில்தான். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அச்சப்பட வேண்டாம்
மேலும் பல நோய்களின் தாக்கத்தால்தான் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறகையில், கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

வல்லரசு நாடுகள்
வல்லரசு நாடுகள் கூட திணறுகின்றன. இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் நிலைமை என்ன என்று பார்க்கிறீர்கள். 15 முதல் 16 சதவீதம் இறப்பு விகிதம் மேலை நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் பதட்டத்தை எப்படி குறைப்பது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் அரசு ரொம்பவே கவனம் செலுத்துகிறது.

இணை நோய்கள்
இதர நோய்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்குத்தான், கொரோனா காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறதே தவிர, கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு கிடையாது. எண்ணிக்கையை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கடைபிடித்தால் போதும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை நிலவரம்
கோவையில் அரசு மருத்துவமனைகள் தான் தனியார் மருத்துவமனைகளை விடவும் சிறப்பாக சிகிச்சை அளித்து வருவதாக பேட்டியின் போது உடனிருந்த அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications