தமிழகத்தில் கொரோனா பலி பின்னணி என்ன? அமைச்சர் விஜய பாஸ்கர் சொல்லும் காரணம் இதுதான்
கோவை: தமிழகத்தில் கொரோனா சார்ந்த இறப்பு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அதிக பரிசோதனைகள் எடுக்கப்படுவது சென்னையை தொடர்ந்து கோவையில்தான். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அச்சப்பட வேண்டாம்
மேலும் பல நோய்களின் தாக்கத்தால்தான் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறகையில், கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

வல்லரசு நாடுகள்
வல்லரசு நாடுகள் கூட திணறுகின்றன. இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் நிலைமை என்ன என்று பார்க்கிறீர்கள். 15 முதல் 16 சதவீதம் இறப்பு விகிதம் மேலை நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் பதட்டத்தை எப்படி குறைப்பது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் அரசு ரொம்பவே கவனம் செலுத்துகிறது.

இணை நோய்கள்
இதர நோய்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்குத்தான், கொரோனா காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறதே தவிர, கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு கிடையாது. எண்ணிக்கையை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கடைபிடித்தால் போதும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை நிலவரம்
கோவையில் அரசு மருத்துவமனைகள் தான் தனியார் மருத்துவமனைகளை விடவும் சிறப்பாக சிகிச்சை அளித்து வருவதாக பேட்டியின் போது உடனிருந்த அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications