அவங்க பிளனே வேற! திடீரென கிளம்பிய பொன்னியின் செல்வன் சர்ச்சை.. காரணமே இதுதான்! சுப வீரபாண்டியன் பரபர
கோவை: பொன்னியின் செல்வன் குறித்து சில நாட்களாகச் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாகச் சுப வீரபாண்டியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
கல்கி எழுத்தில் 1950களில் தொடர்கதையாக வெளியானது தான் பொன்னியின் செல்வன். சோழர்கள் குறித்த இந்த வரலாற்றுப் புனைவு 5 பாகங்களாகப் புத்தகமாகவும் வெளியானது.
இந்த வரலாற்று நாவலைப் பலரும் திரைப்படமாக எடுக்க முயன்றனர். இருப்பினும், பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யாராலும் இதை வெற்றிகரமாகப் படமாக எடுக்க முடியவில்லை.

பொன்னியின் செல்வன்
இந்தச் சூழலில் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதில் முதல் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்ற பெற்றது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வசூலைக் குவித்து வரும் நிலையில், சமூகத்திலும் இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன்
இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி அவர், "சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை வேண்டும் இல்லையென்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது" என்று அவர் பேசி இருந்தார்.

பதிலடி
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் குரல் கொடுக்க தொடங்கினர். பல்வேறு வலதுசாரிகளும் வெற்றிமாறன் கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றினர். தஞ்சை பெரிய கோயில் தொடங்கி பல்வேறு சிவன் கோயில்களைக் கட்டிய ராஜராஜன் சோழன் இந்து மன்னர் இல்லை என்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இது பெரிய விவாதமாகவே மாறிவிட்டது.

சுப வீரபாண்டியன்
இந்தச் சூழலில் இது தொடர்பாகத் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். பொள்ளாச்சி முன்னாள் நகர மன்ற தலைவர் மிசா விஜயராகவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த நிலையில், அவரது திருவுருவப் படத்திற்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் விஜயராகவன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

பிளன வேற
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப வீரபாண்டியன், "ஆ ராசா, இயக்குநர் வெற்றிமாறன் பேசியதை வைத்துக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றர். திட்டமிட்டுத் திணிப்பு வாதத்தை ஏற்படுத்துகின்றனர்.. இந்த விவகாரத்தில் நடிகர் கமலஹாசன் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.. நாட்டு மக்களின் பிரச்சினை ராஜராஜ சோழன்
இந்துவா? இல்லையா? என்பது அல்ல..

திசைதிருப்பும் முயற்சி
இதை வைத்துக்கொண்டு மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. உத்திரப் பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரையில் சுற்றுச்சுவர் பணிகள் கூட முடியாத நிலையில், 95 சதவீத பணிகள் முடிந்து விட்டது என்று பொய் பேசுகிறார்கள். நாட்டில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சினையைத் திசைதிருப்பவே இந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications