Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்க பிளனே வேற! திடீரென கிளம்பிய பொன்னியின் செல்வன் சர்ச்சை.. காரணமே இதுதான்! சுப வீரபாண்டியன் பரபர

Subscribe to Oneindia Tamil

கோவை: பொன்னியின் செல்வன் குறித்து சில நாட்களாகச் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாகச் சுப வீரபாண்டியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

கல்கி எழுத்தில் 1950களில் தொடர்கதையாக வெளியானது தான் பொன்னியின் செல்வன். சோழர்கள் குறித்த இந்த வரலாற்றுப் புனைவு 5 பாகங்களாகப் புத்தகமாகவும் வெளியானது.

இந்த வரலாற்று நாவலைப் பலரும் திரைப்படமாக எடுக்க முயன்றனர். இருப்பினும், பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யாராலும் இதை வெற்றிகரமாகப் படமாக எடுக்க முடியவில்லை.

 பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இந்தச் சூழலில் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதில் முதல் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்ற பெற்றது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வசூலைக் குவித்து வரும் நிலையில், சமூகத்திலும் இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி அவர், "சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை வேண்டும் இல்லையென்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது" என்று அவர் பேசி இருந்தார்.

 பதிலடி

பதிலடி

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் குரல் கொடுக்க தொடங்கினர். பல்வேறு வலதுசாரிகளும் வெற்றிமாறன் கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றினர். தஞ்சை பெரிய கோயில் தொடங்கி பல்வேறு சிவன் கோயில்களைக் கட்டிய ராஜராஜன் சோழன் இந்து மன்னர் இல்லை என்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இது பெரிய விவாதமாகவே மாறிவிட்டது.

 சுப வீரபாண்டியன்

சுப வீரபாண்டியன்

இந்தச் சூழலில் இது தொடர்பாகத் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். பொள்ளாச்சி முன்னாள் நகர மன்ற தலைவர் மிசா விஜயராகவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த நிலையில், அவரது திருவுருவப் படத்திற்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் விஜயராகவன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 பிளன வேற

பிளன வேற

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப வீரபாண்டியன், "ஆ ராசா, இயக்குநர் வெற்றிமாறன் பேசியதை வைத்துக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றர். திட்டமிட்டுத் திணிப்பு வாதத்தை ஏற்படுத்துகின்றனர்.. இந்த விவகாரத்தில் நடிகர் கமலஹாசன் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.. நாட்டு மக்களின் பிரச்சினை ராஜராஜ சோழன்
இந்துவா? இல்லையா? என்பது அல்ல..

 திசைதிருப்பும் முயற்சி

திசைதிருப்பும் முயற்சி

இதை வைத்துக்கொண்டு மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. உத்திரப் பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரையில் சுற்றுச்சுவர் பணிகள் கூட முடியாத நிலையில், 95 சதவீத பணிகள் முடிந்து விட்டது என்று பொய் பேசுகிறார்கள். நாட்டில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சினையைத் திசைதிருப்பவே இந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+