Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விட்ருங்க, கர்ப்பமா இருக்கேன்".. பதறிய தமன்னா.. சுற்றி வளைத்த போலீஸ்.. கோர்ட் சொன்ன முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: ஆயுதங்களை ஏந்தி, ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட இளம்பெண் தமன்னா என்கிற வினோதினிக்கு, இன்று கோவை கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கோகுல்.. இவர் கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2021ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டார்.. அந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிதான் இவர்.

பழிக்குப்பழி

பழிக்குப்பழி

எனவே, பழிக்குப்பழி வாங்குவதற்காகவே, கோகுல் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.. இதையடுத்து, குரங்கு ஸ்ரீராம் நண்பர் வட்டாரத்தின் முக்கிய நபர்களை போலீசார் குறிவைத்து விசாரிக்க துவங்கினர்.. அப்படி சிக்கியவர்தான் வினோதினி.. இவருக்கு தமன்னா என்று இன்னொரு பெயரும் உண்டு. 23 வயதாகிறது.. நர்சிங் படித்துள்ளார்.. ஆனாலும், தன்னுடைய ஆண்நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. குறிப்பாக, பீளமேடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, முறைகேடாக பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்.

 ரீல்ஸ் வீடியோ

ரீல்ஸ் வீடியோ

இதையடுத்து, கடந்த வருடம் இவரை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், ஜெயிலுக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் வந்த தமன்னா, திருந்தவில்லை.. மாறாக, முன்பைவிட அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்... மேலும் சோஷியல் மீடியாவில் ரவுடி குரூப்களுடன் சேர்ந்து கொண்டு, நிறைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு, வந்துள்ளார்.. கையில் அரிவாள், வாயில் சிகரெட் என ஏராளமான வீடியோக்களை பதிவிட்டதுடன், பகையை தூண்டும் வகையில் அந்த வீடியோக்களையும் வெளியிட்டு பதற்றத்தையும் உருவாக்கினார்.

 அதென்ன வாயிலே

அதென்ன வாயிலே

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கத்தி, அரிவாள் என ஆயுதங்களுடன் தோன்றியதுடன், ஆட்சேபகரமாகவும் பேசி சிலருக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தார்.. இதையடுத்து, தமன்னாவை பிடிக்க கோவை போலீசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.. போலீசார் தன்னை தேடுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட தமன்னா, ஒரு வீடியோவை பேசி வெளியிட்டு தன்னிலை விளக்கம் தந்திருந்தார்.. அதில், "கஞ்சா வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்றேன். சிறையில் இருந்து திரும்பியதுமே, ஆட்சேபகரமான வீடியோக்கள் எதையும் நான் வெளியிடவில்லை.

 கர்ப்பம்

கர்ப்பம்

ஆனாலும் போலீசார் என்னை தேடுகிறார்கள். என் நண்பர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துக்கொண்டு விட மறுக்கிறார்கள். நான் வந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்போம் என்று போலீஸ் சொல்கிறார்களாம்.. நான் முன்பு போல கிடையாது.. இப்போது நான் திருந்திவிட்டேன்.. நிறைய மாறிவிட்டேன்.. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. கணவருடன் வாழ்ந்து வருகிறேன்.. இப்போது நான் 6 மாத கர்ப்பமாகவும் இருக்கிறேன்.. வீடியோ எதையும் நான் இப்போது போடவுமில்லை.. திருந்தி வாழும் என்னை போலீசார் தேட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். எனினும், தமன்னாவை பிடிக்க கோவை போலீசார் தீவிரமாகி கொண்டேயிருந்த நிலையில், சங்ககிரியில் தமன்னா பதுங்கியிருப்பதாக தகவல் வரவும், அங்கு விரைந்த தனிப்படையினர், சுற்றி வளைத்து கைது செய்தனர்..

 கண்டிஷனல் பெயில்

கண்டிஷனல் பெயில்

அதாவது, கடந்த 2021ம் ஆண்டு போடப்பட்ட கஞ்சா வழக்கில்தான் தமன்னாவை கைது செய்தனர்.. பிறகு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் தமன்னாவை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஷ்வரன், வினோதினி என்கின்ற தமன்னாவை நீதிமன்ற காவலில் அடைத்து உத்தரவிட்டார்... இதனிடையே, தான் 6 மாத கர்ப்பிணி என்றும்,ள ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தார் தமன்னா.. இந்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றமும், மறு உத்தரவு வரும் வரை தினமும் பீளமேடு ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+